Friday, January 18, 2013

பிள்ளையார் சுழி

மொத மொதல்லே மூணாவுது  ப்ளாக் சைட் (blog site ) பண்ணறோம் ஒரு சுப ஆரம்பமா இருக்கட்டுமேன்னு தான் .. பிள்ளையார் சுழி போட்டு ஆர்ம்பிச்சி ருக்கேன்.

அது சரி அது என்ன பிள்ளையார்னு கேக்கறீங்களா ? பிள்ளையார் பிடிக்க குரங்கா முடிஞ்ச கதை மாதிரி ஆகாம இருக்கணுமே .. அதான்.

என்னதான் குரங்குதனமா எழுதினாலும் தொடங்கும்போதாவது நல்லா இருக்கணும் இல்லையா ? அது தானே பகுத்தறிவு ?

ஆனா ஒரு வடகலை ஐயங்கார் இப்படி பிள்ளையார்லேர்ந்து ஆரம்பிக்கலாமான்னு ஏதாவது கேட்டு வைக்காதீங்க அய்யா ! புண்ணியமா போகும். எதுடா சாக்குன்னு காதுக்கிட்டு இருக்காங்க நம்ம மக்கள்.சும்மா பாஞ்சுடுவாங்க.. இது ஒரு புது சண்டை போட்டுதான் பாக்கலாமேன்னு ..

இங்கிலீஷ் சைட் தான் யாரும் படிக்க மாட்டேன்கறாங்க தமிழ்லே எழுதினாலாவது படிக்கறாங்களான்னு பாக்கலாமே ! 

ஆனா ஒரு விஷயம் .... இந்த ப்ளாக் ( BLOG ) மூலமா நம்ப தமிழ் சமுதாயத்தை மாத்தப்போறேன், வானத்தை வில்லா வளைக்கப்போறேன், கச்சத்தீவை மீட்கப்போறேன், தனி ஈழம் வாங்கப்போறேன், காவேரி தண்ணி வாங்கப்போறேன் அப்படின்னு உட்டாலக்கடி வேலை எல்லாம் என்னாண்டே இல்லை.அதுக்கெல்லாம் தமிழ் நாட்டுலே நெறைய பேர் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க ..

வழக்கம் போலே பாப்பான் பாம்பு புண்ணாக்குன்னு E-MAIL எழுதாமே ஏதாவது உருப்படியா எழுதுங்கப்பா தம்பிங்களா .. புண்ணியமா போகும் ..

2 comments: