Tuesday, February 5, 2013

இது மட்டும் எப்படி சார் ?

கொஞ்ச நாளாவே ஒரு சில கேள்விகள் உண்டு. யார் கிட்டே கேக்கறதுன்னு தெரியலே.நானே கேட்டுக்கறேன்.

1. சினிமாலே தமிழ் வாத்தியார் எல்லாரும் அரை கிறுக்காவே வராங்களே ?
2. வில்லனுக்கு ஐடியா குடுக்கும் வக்கீல் ஒரு ஐயர் ?
3. தமிழ் வாத்தியார் காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பார் / முயற்சி செய்வார்
4. தமிழ் வாத்தியார் காதல் இலக்கியமே நடத்துவார்
5. பட்டிகாட்டு கிராமத்துலே ஹீரோயின் மட்டும் ஸ்கிர்ட் , டி-ஷர்ட் லே வருவா
6. ஹீரோயின் ஓடி வந்தே ஆகணும், அதுவும் slow motion
7. ஓடி வர்றது 3 நிமிஷமா நீண்டுகிட்டே இருக்கும்- ஊரே வேடிக்கை பார்க்கும்
8. வில்லன் நடிகர் ஏன் சவரம் செய்து கொள்வதில்லை ?
9. வீட்டுக்குள் குளிக்கும் போது கதவு மூடுவார்கள். அருவியில் அப்படி இல்லை .
10. தேவர் சமூக ஆட்கள் அநியாயத்தை எதிர்ப்பர்கள். நல்லவர்களாக இருப்பார்கள்.
11. திடீர் என்று வரும் ஒரு அழகி 20 ஆண்கள் புடை சூழ ஆடிவிட்டு மாயமாய் மறைந்து போவாள். அவள்
எங்கே போகிறாள் ?
12. சாப்ட்வேர் எழுதும் ஹீரோக்களின் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர்
ஓடிக்கொண்டிருக்கும். வேலை செய்யறானாம் ....
13. அமைச்சர் எப்பவுமே கருப்பாக இருப்பார் - முகத்தில் வடுக்களுடன் ..
14. ஹீரோவின் நண்பன் பேசிக்கொண்டே இருப்பான். அது தான் காமெடி ..
15. கோவில்கள் காதல் செய்யும் இடங்கள். குருக்கள் எப்பவும் ஒரு ஏமாளி.
16. முஸ்லிம்கள் எப்பவும் ஏழைகளாக இருப்பார்கள் - குல்லாயுடன் ..
18. பள்ளிக்கூடம் - 2 கோஷ்டி மாணவர்கள் சண்டை போடும் இடம்
19. லைப்ரரி - காதலன் காதலியை தேடும் இடம்
20. போலீஸ் ஸ்டேஷன் - போலீஸ்காரர் ரவுடி போல் நடக்கும் இடம்
21. போலீஸ் இன்ஸ்பெக்டர் - காமாந்தக ஆள்
22. ஒரே ஒரு நல்லவர் - ரிடையர் ஆகும் வயதில் உள்ள போலீஸ் ஏட்டு
23. கணவனை இழந்தவள் - ஹீரோயினின் தாய்
24. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவள் - ஹீரோவின் தங்கை
25. எப்போதுமே புரியாதது, கடைசி வரையும், வீட்டுக்கு வந்த பின்பும் தேடிக்கொண்டு இருப்பது - கதை

No comments:

Post a Comment