Sunday, February 24, 2013

சில கேள்விகள் ..

ஒரு சில கேள்விகள் நமக்கு எப்போதுமே உண்டு. பல நேரங்களில் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் தேறவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

அடியேனின் "ஏன் கேள்விகள் ... "

தமிழ் டி.வி. சேனல்களில் பேசும் பெண் அறிவிப்பாளர்கள்

கண்ணை உறுத்தும் ஆடை அணிகிறார்கள்
தமிழ் பேச சிரமப்படுகிறார்கள்
கையை ஆட்டுகிறார்கள், அதுவும் ஒரு பெண்டுலம் மாதிரி

தமிழ் எழுத்தாளர்கள்

எப்போதும் புரியாமலே எழுதுகிறார்கள்
இலங்கை பற்றியே எழுதுகிறார்கள்
ஒரு மாதிரி ஒப்பாரி வைப்பதில் போட்டி போடுகிறார்கள்
எப்போதும் ஹிந்து மதத்தை சாடுகிறார்கள்
சினிமா கலைஞர்களை போற்றியே பேசுகிறார்கள்
'பார்ப்பன ஏகாதிபத்தியம்' இல்லாமல் எழுதுவதே இல்லை

தமிழ் மொழி ஆர்வலர்கள் / தமிழ்த் தலைவர்கள் / சினிமா இயக்குனர்கள்

சினிமாவில் நாயகிகள் ஆடை குறைப்பது தமிழ் கலாச்சாரம் தானா ?
சினிமா விழாக்களில் நாயகிகள் அரை குறை ஆடைகளில் வருவது சரியா ?

பெரியாரும் அண்ணாவும் தவறே செய்யவில்லையா ? அவர்கள் மனிதர்களே இல்லையா ? அண்ணல் காந்தியே தவறுகள் பல செய்தார் என்று பார்க்கிறோமே...

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பகுத்தறிவு சார்ந்து எழுதுவதாகக் கூறிக்கொண்டு 'என் சீதை சோரம் போவாள்', 'என் கண்ணகி மதுரையை எரிக்க மாட்டாள்', 'என் கஸ்துரி பாய் அடிமைப் பணி செய்ய மாட்டாள் ' என்று பிரச்சாரம் செய்கிறார்களே - அது என்ன தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் அடையாளமா ?

பெரியவர் அமிர்தலிங்கம், சாம் துரையப்பா,சிறி சபாரத்தினம், பத்மநாபா, லக்ஷ்மன் கதிர்காமர் இவர்கள் எல்லாம் தமிழர்கள் தானே? இவர்கள் கொலை எல்லாம் கொலை இல்லையா? செய்தவர்கள் கொலை காரர்கள் இல்லையா?

ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் 23 பேர் தமிழர்கள் இல்லையா ?

தமிழ்ப் பத்திரிக்கைகளில் நடுப்பக்கத்தில் அரை நிர்வாண பெண்கள் படம் போடுகிறார்களே அது தமிழ்ப் பண்பாடா ?

"கள் உண்ணாமை" பற்றி வள்ளுவர் சொல்கிறாரே, தமிழ்த் தலைவர்கள் கள்ளுக்கடை ஒழிப்புப் போராட்டம் நடத்தாமல் அரசாங்கம் சார்பாகவே கள்ளுக்கடை நடத்துகிறார்களே அது வள்ளுவ துரோகம் இல்லையா ?

Saturday, February 23, 2013

இவரைத் தெரியுமா ?



பயோ டேட்டா 




பெயர்                     :              விஜய காந்த் 

தொழில்                :              அரசியல் - எதிர்க் கட்சித் தலைவர் 

உப தொழில்         :              நாக்கைக் கடிப்பது

முந்தைய
 தொழில்               :              தீவிரவாதிகளைப் பிடிப்பது (திரையில்)

அடையாளம்       :              சிவந்த கண்கள் ( நிரந்தரமாக )

படிப்பு                     :              பேசத் தெரியாத அளவு

பிடிக்காத
வார்த்தை             :               அம்மா ( அவருடைய அம்மா அல்ல ) 

முகவரி                :                கட்சியினர் வீட்டுக் கல்யாண மண்டபம்   

சொத்து                 :               பாதி இடிபட்ட ஒரு கல்யாண மண்டபம்

பொழுது
 போக்கு                :               கட்சியினரை அடித்து விளையாடுவது


தற்போது  இவரைக்  காணவில்லை. யாரும் தயவு செய்து கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, February 10, 2013

பிராமணனாகப் பிறந்தாலே


பிராமணனாகப் பிறந்தாலே பூணூல் தரிப்பது ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. அதுவும் இவன் பிராமணன் என்று அடையாளம் காட்டி அவனை பகுத்தறிவாளர்கள் அந்த காரணத்துக்காகவே இழிவு படுத்துவதற்க்காகவாவது அது பயன் படுகிறது என்பது உண்மை.

இப்படி ஒரு சமூக மக்களை அடையாளம் காட்டுவதற்காகவா இந்த முப்புரி நூல் என்று சங்க இலக்கியங்களால் காட்டப்படும் ஒரு புனித அணி பயன் படுகிறது? பூணூல் என்னும் அந்த முப்புரி நூலிற்கு அர்த்தம் என்ன? அதை அணிவதால் ஒருவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அதனால் அவன் வாழ்வில் அடையும் நிலை என்ன ? என்று பார்த்து அதன் பிறகு இந்த சடங்கு தற்போது எப்படி நடத்தப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

பூணூல் போடுவதற்கு உப நயனம் (उपनयन ), பிரம்மோபதேசம் ( ब्रह्म्मोपदेश) என்று பெயர். உப நயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்று பொருள் - அதாவது பிரம்மத்திற்கு அருகில் அழைத்துச் செல்லுதல் . பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் என்று அழைக்கப்பட்டான்.

தந்தை மகனை குருவின் அருகில் அழைத்துச்செல்கிறார். பிறகு குரு பிரம்மத்தின் அருகில் அழைத்துச்செல்கிறார்.உப நயனத்தின் பிறகு சிறுவனுக்கு வேத பாடங்கள் தொடங்க வேண்டும், கல்வி அறிவு பெறத்தொடங்க வேண்டும். அதற்க்கான ஒரு MILESTONE தான் உப நயனம்.

உபநயனம் ஆன பின் சிறுவன் இரு பிறப்பாளான் ஆகிறான். அன்றிலிருந்து பார்ப்பனன் என்ற உயர் நிலையை அடைய முதல் அடி எடுத்து வைக்கிறான்.

நூல் தரித்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் பெற்ற பின் அவன் வாழ்வில் பிரமச்சரிய விரதம் மேற்கொள்ளத்துவங்குகிறான். வாழ்வின் சுகங்களிளிருந்து விலகி பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்று கடுமையான விதி உள்ளது. குருவிடம் கல்வி கற்கும்போது, அவருக்குப் பணிவிடை செய்து குருகுலவாசம் செய்ய வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

முப்புரி நூல் என்பது ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்று குணங்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற ஒரு BOUNDARY CONDITION. ஒரு தடை மாதிரி அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டியது. இந்த மாதிரியான தடைகள் இருந்தால் தான் அவன் கவனம் வேறு எங்கும் செல்லமால் கல்வியில் இருக்கும் என்று அன்று நினைத்தார்கள்.

முப்புரிநூல் குரு, பெற்றோர், கடவுள் ஆகிய மூவருக்கும் கடன் பட்டவன் என்பதைக் குறிப்பதாகவும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.

உப நயனம் ஒரு வைதிக கர்மா - அதாவது நியமங்கள் படி அது ஆடம்பரம் இன்றி பக்தியுடனும் அளவிடமுடியாத மரியாதையுடனும், சிறுவன் நல்ல முறையில் படிக்க வேண்டுமே நல்ல கல்விமானாக வேண்டுமே என்ற ஆதங்கத்துடனும் குருவின் சொல்படி நடந்து பிரமத்தை அறிய வேண்டுமே என்கிற வேண்டுதலுடனும் செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.

உபநயன நாளிற்கு முன் நாள் இரவு, சிறுவன் மௌன விரதம் கடை பிடிக்க வேண்டும். அது அவன் தன தாயின் கர்ப்பத்தில் இருப்பதை உணர்த்துகிறது. மறு நாள் காலை, சிறுவனும் அவன் தாயும் ஒன்றாக உணவு அருந்துகிறார்கள். பின்னர் சிறுவனுக்கு உபநயனம் நடை பெறுகிறது.இவ்வாறு அவன் இரு பிறப்பாளன் ஆகிறான்.

இப்படி வைதீகமாக செய்ய வேண்டிய ஒரு புனித சடங்கைத் தற்போது எப்படி நடத்துகிறார்கள் ?

தற்போது அடுத்தவன் வீட்டு உப நயனத்தைவிட தன் வீட்டு உப நயனமே அதிக சிறப்பாகவும் ஆடம்பரத்துடனும் நடந்தது என்று வெளிக்காட்டிக் கொள்ளும் வகையில் ஒரு கல்யாணம் போலே மிகுந்த தடபுடல்களுடன் ஆடம்பரங்களுடனும் அதிகப்படியான உடுப்பு மற்றும் பேச்சுக்களுடனும் நடக்கின்றன. ஒரு 3 லட்சம் ருபாய் செலவு ஆகிறது என்று அறிகிறேன்.

முக்கியமாக உபநயனம் ஒரு சிறுவனைப்பற்றியது என்பது போய் தாய் தந்தையரின் STATUS சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகிவிட்டது ஒரு சோகமே.

உப நயனம் ஆனசிறுவனும் அன்று தவிர வேறு நாட்களில் ஒரு வேளை கூடசந்தியாவந்தனம் பண்ணுவது கிடையாது. அப்பா செய்தால் தானே மகன் செய்வது அப்பாவிற்கு பணத்தின் மேல் கண். அம்மாவிற்கு டிவியின் மேல் கண். மகனுக்கு COMPUTER GAMES மீது கண்.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள் பற்றி வருகிறது ( வேறு பல நூல்களிலும் வருகிறது தான். ஆனால் இப்போது அவகாசம் இல்லை ). கண்ணகி மதுரையை எரிக்கும் போது இவ்வாறு கூறுகிறாள் :

" ஆவும் ஆநிரை பார்ப்பன மக்களும் பெண்டிரும் பிணி உடையீரும் "

என்று இவர்களை விடுத்து மற்ற எல்லாவற்றையும் பொசுக்கிவிடுமாறு அக்னி தேவனை வேண்டுகிறாள். அவள் அந்தக்கால பிராமணர்களை விட்டுவிடக் கூறுகிறாள். அவர்கள் அவ்வளவு கல்விமான்களாக இருந்திருப்பார்கள் போலே.

காஞ்சிப் பெரியவர், கலி காலத்தில் இந்த பூணூல் என்பது ஒரு அந்தணனுக்கு அடையாளம் என்று மட்டுமே தெரியப்படும் என்று பழைய சாஸ்த்ரங்களில் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார்.

இன்று பிராமணன் யாரும் பிரம்மத்தை அறிந்ததாகத் தெரியவில்லை. வெறும் பிராமஹத்திகளாக இருக்கிறார்கள் என்று வேதனையுடன் நினைக்க வேண்டி இருக்கிறது.

பி.கு :

  1. உபநயனம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் தவறு. க்ஷத்ரிய மற்றும் வைசியர்களுக்கும் இந்த கர்மா இருக்கிறது. தற்போது க்ஷத்ரிய , வைசிய திருமணங்களில் இது நடை பெறுகிறது. அன்று மட்டும் அவர்கள் பூணூல் அணிகிறார்கள். தற்போது தங்கத்தில் பூணூல் அணியும் வழக்கம் உள்ளது.
  2. தற்போது இவ்வளவு பணம் செலவு செய்து உபநயனம் செய்ய பலராலும் முடியாத காரணத்தால் சமஷ்டி உபநயனம் செய்ய வேண்டிய ஒரு நிலையில் ஒரு SOCIAL EVENT தேவைப்படும் நிலையில் பிராம்மண சமூகம் உள்ளது. இந்த சமஷ்டி உபநயனங்கள் பழைய காலத்திலும் இருந்தன. அப்போதும்  பிராம்மண சமூகம் இருந்த ஒரு வறிய நிலையை அறியலாம்.

Friday, February 8, 2013

தமிலே படி, நாசமா போ..


தமிழில் கலைச்சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும். புதிய கலைச்சொற்கள் கொண்டு தமிழை வளர்க்கலாம் வாரீர் என்று மக்களின் நேரத்தையும்,உழைப்பையும் உறிஞ்சி அவர்களை மேலும் படு குழியில் தள்ள தமிழ்த் தலைவர்கள் ஆவலாக உள்ளனர். அந்த வரிசையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து விட்டார்.

வாழ்கையே போராட்டமாக இருக்கும் பல மக்களுக்கு, ஆங்கிலம் மூலமாக ஒரு நல்ல வாழ்வு அமைந்தால் அதை எடுத்துக்கொண்டு மேலே செல்வது தான் அவர்கள் செய்வதாக இருக்கும். செய்ய வேண்டியதும் அதுவே.

அதை விடுத்து அவர்களை தமிழில் படி, தமிழ் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று பொய்யுரை சொல்லி, வார்த்தை விளையாட்டுக்களால் மயக்கி,அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்வது என்ன வகையில் சரி ?

எழுத்தாளர் சுஜாதா திவ்யப்ரபந்தம் முதலிய நூல்களில் இருந்து பல கலைச்சொற்களைத் தொகுத்து எழுதினார்.அவை யாவும் ஆழ்வார்கள் முதலானர்வர்களால் பாசுரங்களில் பயன்படுத்தப்பட்டன. அவற்றை விடுத்து இவர்கள் மீண்டும் புதியதாக சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்று அலைவது எவ்வகையில் சரி ? ( சுஜாதா எந்த காரணத்துக்காக தமிழ் எழுத்தாளர்களாலும் அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படவில்லை என்பது அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவு தேவை இல்லை ).

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள்
 யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்று பாரதி சொன்னார். கலைச்சொல் கண்டு பிடி என்று சொல்லித் தமிழனை சாகடிக்கவில்லை.

தாம் வயிறும் வங்கிக் கணக்கும் வளர்ப்பதற்காக மொழி வெறி வளர்த்து அதன் மூலம் அரசியல் செய்தார்கள் தமிழ் இனத் தலைவர்கள்.

கவிஞர் இளம்பிறை ,

"அம்மா அடுப்பைப் பற்றவை குளிராவது காய்வோம் " என்று அருமையாக எழுதினார்.

ஒரு வேளை உணவுக்கே அல்லாடும் தமிழனை பகுத்தறிவு பேசி, வாத்தைகளால் மயக்கி ஒரு கார்த்திகை சொக்கப்பானை போலே வேண்டும்போது கொளுத்தி விட்டுக் குளிர் காய்வதே இந்த தனித்தமிழ் ஆதரவு எழுத்தாளர்களின் வேலையாகப் போய் விட்டது.

அவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது உள்ள அரசியல் தலைவர்களும் - ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து விடுவார்கள்.

இது தமிழ் நாட்டின் சாபக்கேடு போலும்.

வீரம் நிறைந்த தமிழ் நாடு

தமிழர் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

முதலில் இலங்கையில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்த ஏழை இலங்கை மக்களை அடித்தார்கள். விஜயகாந்த் கட்சி வீரர்களும் இன்ன பிற வேலை இல்லாதவர்களும் சேர்ந்து மாதா கோவிலுக்கு வந்த பெண்களையும் சிறுவர்களையும் அடித்து ( செருப்பு , கல் மற்றும் துடைப்பம் ) துரத்தினார்கள். சோகம் என்னவென்றால், அந்த பயணிகளில் பலர் தமிழர்கள்.

இலங்கை வங்கி சென்னையில் உள்ளது. அதை அடித்து உடைத்தார்கள். வங்கி கட்டடம் உடைப்பால் இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிட்டது.

ராஜபக்ஷேவின் உறவினர் ராமநாதபுரம் கோவிலுக்கு வந்தபோது கோவிலுக்கு உள்ளேயே வைத்து மரியாதை செய்தார்கள் ( செருப்பால் ).


இப்போது ராஜபக்ஷே திருப்பதி வந்தார், எதிர்ப்பு மறுபடியும்.

அவர் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். பெருமாள் சேவை அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. பெருமாள் பல சோதனைகளை வைத்து, பின்பு தான் அருள் வழங்குவார்.

இது போன்ற சோதனைகள் எம் தமிழ் மக்களிடமிருந்து வரும். அஞ்ச வேண்டாம் திரு.ராஜபக்ஷே.. ஏன் என்றால் அடிக்கிற கை தானே அணைக்கும் ?

என்ன இருந்தாலும் முறத்தால் புலியை விரட்டிய ஒரு இனம் அல்லவா ?

பெண் விடுதலை அடைவது எப்படி ?

பெண் விடுதலை , பெண்ணீயம், பெண் கல்வி, பெண்ணைக் ஒரு பொருளாகப் பார்த்தல் - இதெல்லாம் இப்போ ரொம்ப பேர் பேசிக்கறாங்க. தொலைகாட்சிலேயும் இந்த பேச்செல்லாம் அடிக்கடி வருது.

அதுவும் இந்த திராவிட இயக்கப் பெண் பேச்சாளர்கள்,காங்கிரஸ் கட்சிப் பெண் பேச்சாளர்கள், இடது சாரிப் பெண் பேச்சாளர்கள் இவர்கள் எல்லாம் ஒரு NDTV , CNN-IBN  மாதிரி தொலைக் காட்சிகளில் வந்தால், ஒரே பெண்ணீயம், பெண் விடுதலை, ஆண் ஆதிக்க சமுதாயம், சனாதன பிற்போக்குக் கொள்கைகள் - இப்படி ஒரே முழக்கமா இருக்கும்.

சட்டுன்னு ஒரு வெட்டு.

விளம்பர இடைவெளி.

ஒரு ஆண் சவரம் செய்து கொள்வான். ஒரு சவர  நிறுவத்தின் BLADE தெரியும். காரியம் முடிஞ்ச உடனே, ஒரு நவ நாகரீக பெண் வந்து அவன் கன்னத்தைத் தடவுவாள்.

விளம்பரம் முடிவு.

பெண்ணீய வாக்குவாதம் தொடரும்.

மேலே சொன்ன திராவிட, மார்சிய, காங்கிரஸ் பெண்மணிகள் எல்லாரும் மறுபடியும் உரக்கப் பெண்ணீயம் பேசுவாங்க. ஒரே நேரத்துலே. பிறகு ஒரு நடுநிலையாளர் ( அந்த அம்மாவும் உரக்கப் பேசுவாங்க ).

சிறிய இடைவெளி.

விளம்பரம் ஆரம்பம்.

ஒரு ஆண் பெண்ணிடம் புன் முறுவல் பூப்பான். ( அசடு வழிவான் ). அந்த பெண் முகத்தை திருப்பிகொள்ளும். அந்த ஆண் ஒரு வாசனைத் திரவியம் அடித்துகொள்வான் (PERFUME )  .  பிறகு அந்த பெண் தானாக வந்து ஒட்டிகொள்வாள். இன்னும் நான்கு பெண்கள் பின்னே வருவார்கள்.

விளம்பரம் முடிவு.

பெண்ணீயம் தொடரும்.

முற்போக்குப் பெண்கள் பேச்சைத் தொடருவார்கள்.

விளம்பர இடைவெளி.

மகனின் கல்விக்கும், மகளின் கல்யாணத்துக்கும் சேமிக்க வேண்டி ஒரு அரசு நிறுவ வங்கி அறிவுரை விளம்பரம்.

விளம்பரம் முடிவு.

இப்போது வேறு சில பெண்களும் சேர்ந்துகொள்வர். இந்தக் கூட்டத்தில் ஒரு பாரதிய ஜனதா பெண் உறுப்பினரும் சேர்ந்து கொள்வார். மட்டற்ற எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்து இந்த பாரதிய ஜனதா பெண்ணைக் காய்வார்கள்
( ஹிந்து மதம் பிற்போக்கு மதம் இல்லையா ? அதனால்  .. )

விளம்பர இடைவெளி.

முகப்பரு களிம்பு வாங்குவாள் பெண். ஒரு வாரம் கழித்து எல்லா கல்லூரி ஆண்களும் இந்த பெண் பின்னால் ..

விளம்பாரம் முடிவு.

எல்லாப் பெண் பேச்சாளர்களும் ஒரே நேரத்தில் கத்த ( பார்லிமென்ட் போல்), நடுவர் அதற்க்கு மேல் கத்தி கலந்துரையாடலை முடித்து வைப்பார்.

பெண் விடுதலை கிடைத்து எல்லா பேச்சாளர்களும் அடுத்த  தொலைக்காட்சி ஸ்டூடியோவிற்கு  கார்களில் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து இதே சண்டையைத் தொடருவார்கள்.

சுபம்.

Wednesday, February 6, 2013

சில தமிழ் நடைகள் ..

பால் தினகரன் சிங்கை வருகிறார்.

வேறே என்ன? சுவிசேஷம் தான். அவர் என்ன சொல்வரோ புரியாது, ஆனால் அழகாக சொல்வார். அவரை மாதிரி என்னால் பேச முடியாது. சிரிப்பு வராமல் பேச வேண்டும். தொடர்ந்து பேச வேண்டும். திடீர் என்று அழுகை வரமாதிரி பேச வேண்டும். மத்தவங்க அழுவாங்க. ஆனா அவர் அழ மாட்டார். அது ஒரு கலை தான். அதுவும் ஒரு மாதிரி தமிழ் பேச வேண்டும். அது கிறிஸ்தவ போதனை மொழி இலக்கணப்படி அமையும். அதற்ககும் தமிழ் இலக்கணத்துக்கும் தொடர்பு இல்லை.

உதாரணம் : ( கொஞ்சம் பயமாகவும் இருக்கும்- ஆவி, அக்னி - பயப்படாம ? )
"கர்த்தராகிய இயேசுவின் உயிரை உன்னுள் செலுத்து. உன் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்"
"அக்னி அபிஷேக ஆராதனைப் பெருவிழாவில் தூய ஆவியின் பெயரால் ..."

அதே போல் வைஷ்ணவத் தமிழ் ஒரு விதமாய் அமையும். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஒரு சிலரது வியாக்கியானங்கள் தமிழ் கலந்த மணிபிரவாள நடையில் இருக்கும்.

உதாரணம் :
"சேஷ சேஷி பாவத்தில் ஆநிரை மேய்த்த எம்பெருமான் சேஷனாகவும் ஜீவாத்மாக்கள் சேஷியாகவும் இருக்கும் படியாலே, புருஷாத்காரத் தினடிப்படையில் புருஷனாக எம்பெருமானும் ...."

இந்த நடையில் பல வேதாந்த கருத்துக்கள் விளக்கி இருப்பார்கள். பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் ஆழ்வார் பாசுர வியாக்கியானங்கள் ரொம்பவும் பிரசித்தம்.

நாஸ்திக வாதம் தலை தூக்கியபின் பல சம்பிரதாய தமிழ் வழக்குகளும் வார்த்தை முறைகளும் அழிந்துவிட்டன அல்லது அந்த தருவாயில் உள்ளன. இது "வேதம் வளர்த்த தமிழ்நாட்டின் " சாபக்கேடு போலும்.