tag:blogger.com,1999:blog-17746450875297109862024-03-13T12:27:18.757-07:00வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் ..வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் ..Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-54981294211008734172013-02-24T06:55:00.000-08:002013-02-25T07:27:49.318-08:00சில கேள்விகள் ..ஒரு சில கேள்விகள் நமக்கு எப்போதுமே உண்டு. பல நேரங்களில் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் தேறவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.<br />
<br />
அடியேனின் "ஏன் கேள்விகள் ... "<br />
<br />
தமிழ் டி.வி. சேனல்களில் பேசும் பெண் அறிவிப்பாளர்கள்<br />
<br />
கண்ணை உறுத்தும் ஆடை அணிகிறார்கள்<br />
தமிழ் பேச சிரமப்படுகிறார்கள்<br />
கையை ஆட்டுகிறார்கள், அதுவும் ஒரு பெண்டுலம் மாதிரி<br />
<br />
தமிழ் எழுத்தாளர்கள்<br />
<br />
எப்போதும் புரியாமலே எழுதுகிறார்கள்<br />
இலங்கை பற்றியே எழுதுகிறார்கள்<br />
ஒரு மாதிரி ஒப்பாரி வைப்பதில் போட்டி போடுகிறார்கள்<br />
எப்போதும் ஹிந்து மதத்தை சாடுகிறார்கள்<br />
சினிமா கலைஞர்களை போற்றியே பேசுகிறார்கள்<br />
'பார்ப்பன ஏகாதிபத்தியம்' இல்லாமல் எழுதுவதே இல்லை<br />
<br />
தமிழ் மொழி ஆர்வலர்கள் / தமிழ்த் தலைவர்கள் / சினிமா இயக்குனர்கள்<br />
<br />
சினிமாவில் நாயகிகள் ஆடை குறைப்பது தமிழ் கலாச்சாரம் தானா ?<br />
சினிமா விழாக்களில் நாயகிகள் அரை குறை ஆடைகளில் வருவது சரியா ?<br />
<br />
பெரியாரும் அண்ணாவும் தவறே செய்யவில்லையா ? அவர்கள் மனிதர்களே இல்லையா ? அண்ணல் காந்தியே தவறுகள் பல செய்தார் என்று பார்க்கிறோமே...<br />
<br />
தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பகுத்தறிவு சார்ந்து எழுதுவதாகக் கூறிக்கொண்டு 'என் சீதை சோரம் போவாள்', 'என் கண்ணகி மதுரையை எரிக்க மாட்டாள்', 'என் கஸ்துரி பாய் அடிமைப் பணி செய்ய மாட்டாள் ' என்று பிரச்சாரம் செய்கிறார்களே - அது என்ன தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் அடையாளமா ? <br />
<br />
பெரியவர் அமிர்தலிங்கம், சாம் துரையப்பா,சிறி சபாரத்தினம், பத்மநாபா, லக்ஷ்மன் கதிர்காமர் இவர்கள் எல்லாம் தமிழர்கள் தானே? இவர்கள் கொலை எல்லாம் கொலை இல்லையா? செய்தவர்கள் கொலை காரர்கள் இல்லையா?<br />
<br />
ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் 23 பேர் தமிழர்கள் இல்லையா ?<br />
<br />
தமிழ்ப் பத்திரிக்கைகளில் நடுப்பக்கத்தில் அரை நிர்வாண பெண்கள் படம் போடுகிறார்களே அது தமிழ்ப் பண்பாடா ?<br />
<br />
"கள் உண்ணாமை" பற்றி வள்ளுவர் சொல்கிறாரே, தமிழ்த் தலைவர்கள் கள்ளுக்கடை ஒழிப்புப் போராட்டம் நடத்தாமல் அரசாங்கம் சார்பாகவே கள்ளுக்கடை நடத்துகிறார்களே அது வள்ளுவ துரோகம் இல்லையா ?<br />
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-38096193856766550632013-02-23T07:26:00.000-08:002013-02-23T07:28:27.264-08:00இவரைத் தெரியுமா ?<br />
<br />
<div style="text-align: center;">
பயோ டேட்டா </div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgulyxMKfhJSoFNoywrDAiRN5S9usaq0NHPc3ioHUHByKzln2r2GAZGo5FjhSj96T7NEYqMPsEwuUugigQ5tYtEJvcDP8KxMh4WnA_dv8xxGGodNv41pVFW58516qSjJhyphenhyphen9XxuhVsDycyeG/s1600/Capt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgulyxMKfhJSoFNoywrDAiRN5S9usaq0NHPc3ioHUHByKzln2r2GAZGo5FjhSj96T7NEYqMPsEwuUugigQ5tYtEJvcDP8KxMh4WnA_dv8xxGGodNv41pVFW58516qSjJhyphenhyphen9XxuhVsDycyeG/s1600/Capt.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
<div>
பெயர் : விஜய காந்த் </div>
<div>
<br /></div>
<div>
தொழில் : அரசியல் - எதிர்க் கட்சித் தலைவர் </div>
<div>
<br /></div>
<div>
உப தொழில் : நாக்கைக் கடிப்பது<br />
<br />
முந்தைய<br />
தொழில் : தீவிரவாதிகளைப் பிடிப்பது (திரையில்)<br />
<br />
அடையாளம் : சிவந்த கண்கள் ( நிரந்தரமாக )</div>
<div>
<br /></div>
<div>
படிப்பு : பேசத் தெரியாத அளவு</div>
<div>
<br /></div>
<div>
பிடிக்காத<br />
வார்த்தை : அம்மா ( அவருடைய அம்மா அல்ல ) </div>
<div>
<br /></div>
<div>
முகவரி : கட்சியினர் வீட்டுக் கல்யாண மண்டபம் </div>
<div>
<br /></div>
<div>
சொத்து : பாதி இடிபட்ட ஒரு கல்யாண மண்டபம் <br />
<br />
பொழுது<br />
போக்கு : கட்சியினரை அடித்து விளையாடுவது <br />
<br />
<br />
தற்போது இவரைக் காணவில்லை. யாரும் தயவு செய்து கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</div>
<div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-69596801113041719462013-02-10T02:49:00.000-08:002013-02-10T03:14:31.342-08:00பிராமணனாகப் பிறந்தாலே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
பிராமணனாகப் பிறந்தாலே பூணூல் தரிப்பது ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. அதுவும் இவன் பிராமணன் என்று அடையாளம் காட்டி அவனை பகுத்தறிவாளர்கள் அந்த காரணத்துக்காகவே இழிவு படுத்துவதற்க்காகவாவது அது பயன் படுகிறது என்பது உண்மை.<br />
<br />
இப்படி ஒரு சமூக மக்களை அடையாளம் காட்டுவதற்காகவா இந்த முப்புரி நூல் என்று சங்க இலக்கியங்களால் காட்டப்படும் ஒரு புனித அணி பயன் படுகிறது? பூணூல் என்னும் அந்த முப்புரி நூலிற்கு அர்த்தம் என்ன? அதை அணிவதால் ஒருவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அதனால் அவன் வாழ்வில் அடையும் நிலை என்ன ? என்று பார்த்து அதன் பிறகு இந்த சடங்கு தற்போது எப்படி நடத்தப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.<br />
<br />
பூணூல் போடுவதற்கு உப நயனம் (उपनयन ), பிரம்மோபதேசம் ( ब्रह्म्मोपदेश) என்று பெயர். உப நயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்று பொருள் - அதாவது பிரம்மத்திற்கு அருகில் அழைத்துச் செல்லுதல் . பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் என்று அழைக்கப்பட்டான்.<br />
<br />
தந்தை மகனை குருவின் அருகில் அழைத்துச்செல்கிறார். பிறகு குரு பிரம்மத்தின் அருகில் அழைத்துச்செல்கிறார்.உப நயனத்தின் பிறகு சிறுவனுக்கு வேத பாடங்கள் தொடங்க வேண்டும், கல்வி அறிவு பெறத்தொடங்க வேண்டும். அதற்க்கான ஒரு MILESTONE தான் உப நயனம்.<br />
<br />
உபநயனம் ஆன பின் சிறுவன் இரு பிறப்பாளான் ஆகிறான். அன்றிலிருந்து பார்ப்பனன் என்ற உயர் நிலையை அடைய முதல் அடி எடுத்து வைக்கிறான்.<br />
<br />
நூல் தரித்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் பெற்ற பின் அவன் வாழ்வில் பிரமச்சரிய விரதம் மேற்கொள்ளத்துவங்குகிறான். வாழ்வின் சுகங்களிளிருந்து விலகி பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்று கடுமையான விதி உள்ளது. குருவிடம் கல்வி கற்கும்போது, அவருக்குப் பணிவிடை செய்து குருகுலவாசம் செய்ய வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
முப்புரி நூல் என்பது ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்று குணங்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற ஒரு BOUNDARY CONDITION. ஒரு தடை மாதிரி அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டியது. இந்த மாதிரியான தடைகள் இருந்தால் தான் அவன் கவனம் வேறு எங்கும் செல்லமால் கல்வியில் இருக்கும் என்று அன்று நினைத்தார்கள்.<br />
<br />
முப்புரிநூல் குரு, பெற்றோர், கடவுள் ஆகிய மூவருக்கும் கடன் பட்டவன் என்பதைக் குறிப்பதாகவும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.<br />
<br />
உப நயனம் ஒரு வைதிக கர்மா - அதாவது நியமங்கள் படி அது ஆடம்பரம் இன்றி பக்தியுடனும் அளவிடமுடியாத மரியாதையுடனும், சிறுவன் நல்ல முறையில் படிக்க வேண்டுமே நல்ல கல்விமானாக வேண்டுமே என்ற ஆதங்கத்துடனும் குருவின் சொல்படி நடந்து பிரமத்தை அறிய வேண்டுமே என்கிற வேண்டுதலுடனும் செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.<br />
<br />
உபநயன நாளிற்கு முன் நாள் இரவு, சிறுவன் மௌன விரதம் கடை பிடிக்க வேண்டும். அது அவன் தன தாயின் கர்ப்பத்தில் இருப்பதை உணர்த்துகிறது. மறு நாள் காலை, சிறுவனும் அவன் தாயும் ஒன்றாக உணவு அருந்துகிறார்கள். பின்னர் சிறுவனுக்கு உபநயனம் நடை பெறுகிறது.இவ்வாறு அவன் இரு பிறப்பாளன் ஆகிறான்.<br />
<br />
இப்படி வைதீகமாக செய்ய வேண்டிய ஒரு புனித சடங்கைத் தற்போது எப்படி நடத்துகிறார்கள் ?<br />
<br />
தற்போது அடுத்தவன் வீட்டு உப நயனத்தைவிட தன் வீட்டு உப நயனமே அதிக சிறப்பாகவும் ஆடம்பரத்துடனும் நடந்தது என்று வெளிக்காட்டிக் கொள்ளும் வகையில் ஒரு கல்யாணம் போலே மிகுந்த தடபுடல்களுடன் ஆடம்பரங்களுடனும் அதிகப்படியான உடுப்பு மற்றும் பேச்சுக்களுடனும் நடக்கின்றன. ஒரு 3 லட்சம் ருபாய் செலவு ஆகிறது என்று அறிகிறேன்.<br />
<br />
முக்கியமாக உபநயனம் ஒரு சிறுவனைப்பற்றியது என்பது போய் தாய் தந்தையரின் STATUS சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகிவிட்டது ஒரு சோகமே.<br />
<br />
உப நயனம் ஆனசிறுவனும் அன்று தவிர வேறு நாட்களில் ஒரு வேளை கூடசந்தியாவந்தனம் பண்ணுவது கிடையாது. அப்பா செய்தால் தானே மகன் செய்வது அப்பாவிற்கு பணத்தின் மேல் கண். அம்மாவிற்கு டிவியின் மேல் கண். மகனுக்கு COMPUTER GAMES மீது கண்.<br />
<br />
சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள் பற்றி வருகிறது ( வேறு பல நூல்களிலும் வருகிறது தான். ஆனால் இப்போது அவகாசம் இல்லை ). கண்ணகி மதுரையை எரிக்கும் போது இவ்வாறு கூறுகிறாள் :<br />
<br />
" ஆவும் ஆநிரை பார்ப்பன மக்களும் பெண்டிரும் பிணி உடையீரும் "<br />
<br />
என்று இவர்களை விடுத்து மற்ற எல்லாவற்றையும் பொசுக்கிவிடுமாறு அக்னி தேவனை வேண்டுகிறாள். அவள் அந்தக்கால பிராமணர்களை விட்டுவிடக் கூறுகிறாள். அவர்கள் அவ்வளவு கல்விமான்களாக இருந்திருப்பார்கள் போலே.<br />
<br />
காஞ்சிப் பெரியவர், கலி காலத்தில் இந்த பூணூல் என்பது ஒரு அந்தணனுக்கு அடையாளம் என்று மட்டுமே தெரியப்படும் என்று பழைய சாஸ்த்ரங்களில் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார்.<br />
<br />
இன்று பிராமணன் யாரும் பிரம்மத்தை அறிந்ததாகத் தெரியவில்லை. வெறும் பிராமஹத்திகளாக இருக்கிறார்கள் என்று வேதனையுடன் நினைக்க வேண்டி இருக்கிறது.<br />
<br />
பி.கு :<br />
<br />
<ol style="text-align: left;">
<li>உபநயனம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் தவறு. க்ஷத்ரிய மற்றும் வைசியர்களுக்கும் இந்த கர்மா இருக்கிறது. தற்போது க்ஷத்ரிய , வைசிய திருமணங்களில் இது நடை பெறுகிறது. அன்று மட்டும் அவர்கள் பூணூல் அணிகிறார்கள். தற்போது தங்கத்தில் பூணூல் அணியும் வழக்கம் உள்ளது.</li>
<li>தற்போது இவ்வளவு பணம் செலவு செய்து உபநயனம் செய்ய பலராலும் முடியாத காரணத்தால் சமஷ்டி உபநயனம் செய்ய வேண்டிய ஒரு நிலையில் ஒரு SOCIAL EVENT தேவைப்படும் நிலையில் பிராம்மண சமூகம் உள்ளது. இந்த சமஷ்டி உபநயனங்கள் பழைய காலத்திலும் இருந்தன. அப்போதும் பிராம்மண சமூகம் இருந்த ஒரு வறிய நிலையை அறியலாம்.</li>
</ol>
</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-49764220922792569922013-02-08T23:48:00.000-08:002013-02-08T23:58:53.042-08:00தமிலே படி, நாசமா போ.. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />தமிழில் கலைச்சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும். புதிய கலைச்சொற்கள் கொண்டு தமிழை வளர்க்கலாம் வாரீர் என்று மக்களின் நேரத்தையும்,உழைப்பையும் உறிஞ்சி அவர்களை மேலும் படு குழியில் தள்ள தமிழ்த் தலைவர்கள் ஆவலாக உள்ளனர். அந்த வரிசையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து விட்டார்.<br /><br /> வாழ்கையே போராட்டமாக இருக்கும் பல மக்களுக்கு, ஆங்கிலம் மூலமாக ஒரு நல்ல வாழ்வு அமைந்தால் அதை எடுத்துக்கொண்டு மேலே செல்வது தான் அவர்கள் செய்வதாக இருக்கும். செய்ய வேண்டியதும் அதுவே.<br /><br /> அதை விடுத்து அவர்களை தமிழில் படி, தமிழ் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று பொய்யுரை சொல்லி, வார்த்தை விளையாட்டுக்களால் மயக்கி,அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்வது என்ன வகையில் சரி ? <br /><br />எழுத்தாளர் சுஜாதா திவ்யப்ரபந்தம் முதலிய நூல்களில் இருந்து பல கலைச்சொற்களைத் தொகுத்து எழுதினார்.அவை யாவும் ஆழ்வார்கள் முதலானர்வர்களால் பாசுரங்களில் பயன்படுத்தப்பட்டன. அவற்றை விடுத்து இவர்கள் மீண்டும் புதியதாக சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்று அலைவது எவ்வகையில் சரி ? ( சுஜாதா எந்த காரணத்துக்காக தமிழ் எழுத்தாளர்களாலும் அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படவில்லை என்பது அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவு தேவை இல்லை ). <br /><br /> "<span style="background-color: yellow;">சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள்<br /> யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் </span>" <div>
என்று பாரதி சொன்னார். கலைச்சொல் கண்டு பிடி என்று சொல்லித் தமிழனை சாகடிக்கவில்லை.</div>
<div>
<br />தாம் வயிறும் வங்கிக் கணக்கும் வளர்ப்பதற்காக மொழி வெறி வளர்த்து அதன் மூலம் அரசியல் செய்தார்கள் தமிழ் இனத் தலைவர்கள்.<br /><br /> கவிஞர் இளம்பிறை , <br /><br />"<span style="background-color: yellow;">அம்மா அடுப்பைப் பற்றவை குளிராவது காய்வோம்</span> " என்று அருமையாக எழுதினார்.<br /><br /> ஒரு வேளை உணவுக்கே அல்லாடும் தமிழனை பகுத்தறிவு பேசி, வாத்தைகளால் மயக்கி <span style="background-color: yellow;">ஒரு கார்த்திகை சொக்கப்பானை போலே வேண்டும்போது கொளுத்தி விட்டுக் குளிர் காய்வதே</span> இந்த தனித்தமிழ் ஆதரவு எழுத்தாளர்களின் வேலையாகப் போய் விட்டது. <br /><br /> அவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது உள்ள அரசியல் தலைவர்களும் - ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து விடுவார்கள்.<br /><br /> இது தமிழ் நாட்டின் சாபக்கேடு போலும்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-70349560182064612722013-02-08T16:45:00.001-08:002013-02-08T16:57:11.203-08:00வீரம் நிறைந்த தமிழ் நாடு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhio2NLorZGvA-gjew2_imTPoldMnqILKhqCp_hn6hel6CjVV6GIol6ZXmPTPXgpH26_dvAP15mBJG0vvnNOZ_vp1VZ3ED7qDZqrYbOalmj6AJ-VnNySMlbb6-KSwj8BThrJBmSVviPT9qi/s640/blogger-image--136948815.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="126" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhio2NLorZGvA-gjew2_imTPoldMnqILKhqCp_hn6hel6CjVV6GIol6ZXmPTPXgpH26_dvAP15mBJG0vvnNOZ_vp1VZ3ED7qDZqrYbOalmj6AJ-VnNySMlbb6-KSwj8BThrJBmSVviPT9qi/s200/blogger-image--136948815.jpg" width="200" /></a>தமிழர் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது.<br />
<br />
முதலில் இலங்கையில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்த ஏழை இலங்கை மக்களை அடித்தார்கள். விஜயகாந்த் கட்சி வீரர்களும் இன்ன பிற வேலை இல்லாதவர்களும் சேர்ந்து மாதா கோவிலுக்கு வந்த பெண்களையும் சிறுவர்களையும் அடித்து ( செருப்பு , கல் மற்றும் துடைப்பம் ) துரத்தினார்கள். சோகம் என்னவென்றால், அந்த பயணிகளில் பலர் தமிழர்கள். <br />
<br />
இலங்கை வங்கி சென்னையில் உள்ளது. அதை அடித்து உடைத்தார்கள். வங்கி கட்டடம் உடைப்பால் இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிட்டது. <br />
<br />
ராஜபக்ஷேவின் உறவினர் ராமநாதபுரம் கோவிலுக்கு வந்தபோது கோவிலுக்கு உள்ளேயே வைத்து மரியாதை செய்தார்கள் ( செருப்பால் ).<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkPyguKj6yPYxsSyKbNJD4QLlh7NcUNaifMwSx4pF7LwOnnb6jcjoJ_9SGXYJQzC6y7fl9xYSKZWrO_OSCRaKvws6BbNYH_HTnmEM4TmUn46YFLFwVBSqP3H1g2bW3aumwmbKTP1K7VL-3/s640/blogger-image--2097046505.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="116" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkPyguKj6yPYxsSyKbNJD4QLlh7NcUNaifMwSx4pF7LwOnnb6jcjoJ_9SGXYJQzC6y7fl9xYSKZWrO_OSCRaKvws6BbNYH_HTnmEM4TmUn46YFLFwVBSqP3H1g2bW3aumwmbKTP1K7VL-3/s200/blogger-image--2097046505.jpg" width="200" /></a><br />
இப்போது ராஜபக்ஷே திருப்பதி வந்தார், எதிர்ப்பு மறுபடியும்.<br />
<br />
அவர் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். பெருமாள் சேவை அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. பெருமாள் பல சோதனைகளை வைத்து, பின்பு தான் அருள் வழங்குவார். <br />
<br />
இது போன்ற சோதனைகள் எம் தமிழ் மக்களிடமிருந்து வரும். அஞ்ச வேண்டாம் திரு.ராஜபக்ஷே.. ஏன் என்றால் அடிக்கிற கை தானே அணைக்கும் ? <br />
<br />
என்ன இருந்தாலும் முறத்தால் புலியை விரட்டிய ஒரு இனம் அல்லவா ? <br />
<br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-57403810721582206312013-02-08T08:42:00.002-08:002013-02-08T09:09:20.544-08:00பெண் விடுதலை அடைவது எப்படி ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixF0sDOQi7DkK3gk0Yo0pwk31svC83GMjApCTpWu_p1jWjAKFTlvIJcszZO9lt4Aoi7mpFdsFayplcgf6vGuLOXeChvvtrYp2gNNZtHlwpC6zjgwWJAdNuj06UFrRSxaO_nilePOE2H94c/s1600/Arundati.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="157" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixF0sDOQi7DkK3gk0Yo0pwk31svC83GMjApCTpWu_p1jWjAKFTlvIJcszZO9lt4Aoi7mpFdsFayplcgf6vGuLOXeChvvtrYp2gNNZtHlwpC6zjgwWJAdNuj06UFrRSxaO_nilePOE2H94c/s200/Arundati.jpg" width="200" /></a></div>
பெண் விடுதலை , பெண்ணீயம், பெண் கல்வி, பெண்ணைக் ஒரு பொருளாகப் பார்த்தல் - இதெல்லாம் இப்போ ரொம்ப பேர் பேசிக்கறாங்க. தொலைகாட்சிலேயும் இந்த பேச்செல்லாம் அடிக்கடி வருது.<br />
<br />
அதுவும் இந்த திராவிட இயக்கப் பெண் பேச்சாளர்கள்,காங்கிரஸ் கட்சிப் பெண் பேச்சாளர்கள், இடது சாரிப் பெண் பேச்சாளர்கள் இவர்கள் எல்லாம் ஒரு <b>NDTV , CNN-IBN</b> மாதிரி தொலைக் காட்சிகளில் வந்தால், ஒரே பெண்ணீயம், பெண் விடுதலை, ஆண் ஆதிக்க சமுதாயம், சனாதன பிற்போக்குக் கொள்கைகள் - இப்படி ஒரே முழக்கமா இருக்கும்.<br />
<br />
சட்டுன்னு ஒரு வெட்டு. <br />
<br />
விளம்பர இடைவெளி.<br />
<br />
ஒரு ஆண் சவரம் செய்து கொள்வான். ஒரு சவர நிறுவத்தின் <b>BLADE</b> தெரியும். காரியம் முடிஞ்ச உடனே, ஒரு நவ நாகரீக பெண் வந்து அவன் கன்னத்தைத் தடவுவாள்.<br />
<br />
விளம்பரம் முடிவு.<br />
<br />
பெண்ணீய வாக்குவாதம் தொடரும்.<br />
<br />
மேலே சொன்ன திராவிட, மார்சிய, காங்கிரஸ் பெண்மணிகள் எல்லாரும் மறுபடியும் உரக்கப் பெண்ணீயம் பேசுவாங்க. ஒரே நேரத்துலே. பிறகு ஒரு நடுநிலையாளர் ( அந்த அம்மாவும் உரக்கப் பேசுவாங்க ).<br />
<br />
சிறிய இடைவெளி.<br />
<br />
விளம்பரம் ஆரம்பம்.<br />
<br />
ஒரு ஆண் பெண்ணிடம் புன் முறுவல் பூப்பான். ( அசடு வழிவான் ). அந்த பெண் முகத்தை திருப்பிகொள்ளும். அந்த ஆண் ஒரு வாசனைத் திரவியம் அடித்துகொள்வான் <b>(PERFUME )</b> . பிறகு அந்த பெண் தானாக வந்து ஒட்டிகொள்வாள். இன்னும் நான்கு பெண்கள் பின்னே வருவார்கள்.<br />
<br />
விளம்பரம் முடிவு.<br />
<br />
பெண்ணீயம் தொடரும்.<br />
<br />
முற்போக்குப் பெண்கள் பேச்சைத் தொடருவார்கள்.<br />
<br />
விளம்பர இடைவெளி.<br />
<br />
மகனின் கல்விக்கும், மகளின் கல்யாணத்துக்கும் சேமிக்க வேண்டி ஒரு அரசு நிறுவ வங்கி அறிவுரை விளம்பரம்.<br />
<br />
விளம்பரம் முடிவு.<br />
<br />
இப்போது வேறு சில பெண்களும் சேர்ந்துகொள்வர். இந்தக் கூட்டத்தில் ஒரு பாரதிய ஜனதா பெண் உறுப்பினரும் சேர்ந்து கொள்வார். மட்டற்ற எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்து இந்த பாரதிய ஜனதா பெண்ணைக் காய்வார்கள்<br />
( ஹிந்து மதம் பிற்போக்கு மதம் இல்லையா ? அதனால் .. )<br />
<br />
விளம்பர இடைவெளி.<br />
<br />
முகப்பரு களிம்பு வாங்குவாள் பெண். ஒரு வாரம் கழித்து எல்லா கல்லூரி ஆண்களும் இந்த பெண் பின்னால் ..<br />
<br />
விளம்பாரம் முடிவு.<br />
<br />
எல்லாப் பெண் பேச்சாளர்களும் ஒரே நேரத்தில் கத்த ( பார்லிமென்ட் போல்), நடுவர் அதற்க்கு மேல் கத்தி கலந்துரையாடலை முடித்து வைப்பார்.<br />
<br />
பெண் விடுதலை கிடைத்து எல்லா பேச்சாளர்களும் அடுத்த தொலைக்காட்சி ஸ்டூடியோவிற்கு கார்களில் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து இதே சண்டையைத் தொடருவார்கள்.<br />
<br />
சுபம்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-80489316136003637202013-02-06T08:03:00.001-08:002013-02-06T08:32:31.402-08:00சில தமிழ் நடைகள் ..பால் தினகரன் சிங்கை வருகிறார். <br />
<br />
வேறே என்ன? சுவிசேஷம் தான். அவர் என்ன சொல்வரோ புரியாது, ஆனால் அழகாக சொல்வார். அவரை மாதிரி என்னால் பேச முடியாது. சிரிப்பு வராமல் பேச வேண்டும். தொடர்ந்து பேச வேண்டும். திடீர் என்று அழுகை வரமாதிரி பேச வேண்டும். மத்தவங்க அழுவாங்க. ஆனா அவர் அழ மாட்டார். அது ஒரு கலை தான். அதுவும் ஒரு மாதிரி தமிழ் பேச வேண்டும். அது கிறிஸ்தவ போதனை மொழி இலக்கணப்படி அமையும். அதற்ககும் தமிழ் இலக்கணத்துக்கும் தொடர்பு இல்லை.<br />
<br />
உதாரணம் : ( கொஞ்சம் பயமாகவும் இருக்கும்- ஆவி, அக்னி - பயப்படாம ? )<br />
"கர்த்தராகிய இயேசுவின் உயிரை உன்னுள் செலுத்து. உன் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்"<br />
"அக்னி அபிஷேக ஆராதனைப் பெருவிழாவில் தூய ஆவியின் பெயரால் ..."<br />
<br />
அதே போல் வைஷ்ணவத் தமிழ் ஒரு விதமாய் அமையும். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஒரு சிலரது வியாக்கியானங்கள் தமிழ் கலந்த மணிபிரவாள நடையில் இருக்கும். <br />
<br />
உதாரணம் : <br />
"சேஷ சேஷி பாவத்தில் ஆநிரை மேய்த்த எம்பெருமான் சேஷனாகவும் ஜீவாத்மாக்கள் சேஷியாகவும் இருக்கும் படியாலே, புருஷாத்காரத் தினடிப்படையில் புருஷனாக எம்பெருமானும் ...."<br />
<br />
இந்த நடையில் பல வேதாந்த கருத்துக்கள் விளக்கி இருப்பார்கள். பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் ஆழ்வார் பாசுர வியாக்கியானங்கள் ரொம்பவும் பிரசித்தம். <br />
<br />
நாஸ்திக வாதம் தலை தூக்கியபின் பல சம்பிரதாய தமிழ் வழக்குகளும் வார்த்தை முறைகளும் அழிந்துவிட்டன அல்லது அந்த தருவாயில் உள்ளன. இது "வேதம் வளர்த்த தமிழ்நாட்டின் " சாபக்கேடு போலும்.<br />
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-21555495235252203112013-02-05T07:39:00.001-08:002013-02-05T08:20:07.400-08:00இது மட்டும் எப்படி சார் ?கொஞ்ச நாளாவே ஒரு சில கேள்விகள் உண்டு. யார் கிட்டே கேக்கறதுன்னு தெரியலே.நானே கேட்டுக்கறேன்.<br />
<br />
1. சினிமாலே தமிழ் வாத்தியார் எல்லாரும் அரை கிறுக்காவே வராங்களே ?<br />
2. வில்லனுக்கு ஐடியா குடுக்கும் வக்கீல் ஒரு ஐயர் ?<br />
3. தமிழ் வாத்தியார் காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பார் / முயற்சி செய்வார் <br />
4. தமிழ் வாத்தியார் காதல் இலக்கியமே நடத்துவார்<br />
5. பட்டிகாட்டு கிராமத்துலே ஹீரோயின் மட்டும் ஸ்கிர்ட் , டி-ஷர்ட் லே வருவா<br />
6. ஹீரோயின் ஓடி வந்தே ஆகணும், அதுவும் slow motion<br />
7. ஓடி வர்றது 3 நிமிஷமா நீண்டுகிட்டே இருக்கும்- ஊரே வேடிக்கை பார்க்கும் <br />
8. வில்லன் நடிகர் ஏன் சவரம் செய்து கொள்வதில்லை ?<br />
9. வீட்டுக்குள் குளிக்கும் போது கதவு மூடுவார்கள். அருவியில் அப்படி இல்லை .<br />
10. தேவர் சமூக ஆட்கள் அநியாயத்தை எதிர்ப்பர்கள். நல்லவர்களாக இருப்பார்கள்.<br />
11. திடீர் என்று வரும் ஒரு அழகி 20 ஆண்கள் புடை சூழ ஆடிவிட்டு மாயமாய் மறைந்து போவாள். அவள் <br />
எங்கே போகிறாள் ? <br />
12. சாப்ட்வேர் எழுதும் ஹீரோக்களின் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் <br />
ஓடிக்கொண்டிருக்கும். வேலை செய்யறானாம் ....<br />
13. அமைச்சர் எப்பவுமே கருப்பாக இருப்பார் - முகத்தில் வடுக்களுடன் ..<br />
14. ஹீரோவின் நண்பன் பேசிக்கொண்டே இருப்பான். அது தான் காமெடி ..<br />
15. கோவில்கள் காதல் செய்யும் இடங்கள். குருக்கள் எப்பவும் ஒரு ஏமாளி.<br />
16. முஸ்லிம்கள் எப்பவும் ஏழைகளாக இருப்பார்கள் - குல்லாயுடன் ..<br />
18. பள்ளிக்கூடம் - 2 கோஷ்டி மாணவர்கள் சண்டை போடும் இடம்<br />
19. லைப்ரரி - காதலன் காதலியை தேடும் இடம் <br />
20. போலீஸ் ஸ்டேஷன் - போலீஸ்காரர் ரவுடி போல் நடக்கும் இடம் <br />
21. போலீஸ் இன்ஸ்பெக்டர் - காமாந்தக ஆள் <br />
22. ஒரே ஒரு நல்லவர் - ரிடையர் ஆகும் வயதில் உள்ள போலீஸ் ஏட்டு<br />
23. கணவனை இழந்தவள் - ஹீரோயினின் தாய் <br />
24. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவள் - ஹீரோவின் தங்கை<br />
25. எப்போதுமே புரியாதது, கடைசி வரையும், வீட்டுக்கு வந்த பின்பும் தேடிக்கொண்டு இருப்பது - கதைUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-5993241290403064752013-02-04T06:05:00.001-08:002013-02-04T06:05:53.296-08:00வரவேற்கிறேன்வரவேற்கிறேன். தமிழ் நாட்டில் அதுவும் பிராம்மண சமூகத்தில் இப்படி நிகழ்வது ஒரு நல்ல முன்னேற்றம். திருமதி.நித்யஸ்ரீ மற்றும் திருமதி.சௌம்யா இருவருமே பாராட்டுக்குரியவர்கள். <br />
<br />
தமிழ் நாட்டிற்கும் கர்நாடக மற்றும் தமிழ் இசை உலகத்திற்கும் பெரிய ஒரு இழப்பை நிகழ விடாமல் தடுத்துள்ளார்கள்.<br />
<br />
"வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் <br />
வாழிய பாரத மணித்திரு நாடு " <br/><br/><div class="separator"style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0fZTIDeODbgE4DT24LKTfEMO9Ow2Lno0OTEpyM-R4CgAcaw9VH_Nh0wUU2JbO3eRLMk-fD4tL7eehpqEhGbSVA2udu-sQNcknhF_HP6wlozPfUZCe6GixnBYVylD8xz4YoklAq4I3I3Ns/s640/blogger-image--1160267761.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0fZTIDeODbgE4DT24LKTfEMO9Ow2Lno0OTEpyM-R4CgAcaw9VH_Nh0wUU2JbO3eRLMk-fD4tL7eehpqEhGbSVA2udu-sQNcknhF_HP6wlozPfUZCe6GixnBYVylD8xz4YoklAq4I3I3Ns/s640/blogger-image--1160267761.jpg" /></a></div> <br/><br/><div class="separator"style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT0NabOmG0uRv5hc4u1Og69YY61rgY1cbuZ54_qL5eubQOK704dftbQwmPmx4TCqT7awniWKdyKlrdBzo20yF80eX3DWkmcWLF47_06NFMIUGmQ8uAZ0DkFN7l1AE9hHz4mk7q6g3p3I1f/s640/blogger-image-1291423211.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT0NabOmG0uRv5hc4u1Og69YY61rgY1cbuZ54_qL5eubQOK704dftbQwmPmx4TCqT7awniWKdyKlrdBzo20yF80eX3DWkmcWLF47_06NFMIUGmQ8uAZ0DkFN7l1AE9hHz4mk7q6g3p3I1f/s640/blogger-image-1291423211.jpg" /></a></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-90907319004189249382013-02-01T23:13:00.001-08:002013-02-02T08:18:44.668-08:00என்ன,தமிழ் நாடு பேர் மாத்தணுமா ?இன்று நடந்த வழக்கு பற்றி சொல்லலேன்னா எனக்கு தலையே வெடிச்சுடும்.என் கோர்ட்டிற்கு வரும் வழக்கு எல்லாமே இப்படி ஏடாகூடமாவே வருது.<br />
<br />
இது தான் வழக்கு :<br />
<br />
பெயர் : திருமதி.அங்கயர்க்கண்ணி எம்.ஏ ., பி.எட்.,பி.எச்.டி.<br />
வயது : <b>70</b><br />
தொழில் : ஓய்வு பெற்ற தமிழாசிரியர்<br />
விருதுகள் : நல்லாசிரியர் விருது <br />
வழக்கு : <span style="background-color: lime;">தமிழ்நாட்டின் பெயரை தாலிபான் நாடு என்று மாற்றுக</span><br />
<br />
முதிர்ந்த உருவம். அறிவின் வெளிப்பாடாக அகன்ற நெற்றி. நடுவில் தமிழ் பெண்களின் அடையாளமான பெரிய குங்குமம். ஆசிரியர் ஆகையால் கையில் ஏதோ ஒரு புத்தகம் வைத்திருந்தார்.<br />
<br />
எனக்கு என் தமிழ் அம்மா திருமதி.உலகம்மாள் அவர்களை மறுபடியும் பார்த்தது போல் இருந்தது.<br />
<br />
"உட்கார்ந்துக்கறீங்களா அம்மா ?", நான் கேட்டேன். அவர்கள் ஒன்றும் குற்றவாளி இல்லையே. அதுவும் ஆசிரியர் வேறு. மறுத்துவிட்டார். <br />
<br />
"இது என்னங்க வழக்கு ? அம்மா,, தமிழ் நாடுனு எப்படி பேர் வந்தது தெரியுமா , யார் வாங்கி கொடுத்தாங்க தெரியுமா ? ", மரியாதையுடன் கேட்டேன்.<br />
<br />
வர வர வழக்குகள் ஒரு மாதிரியாகவே இருக்கின்றன.<br />
<br />
"ஐயா, யார் பேர் வெச்சா என்ன, என்ன பேர் வெச்சா என்ன, நடக்கறது எல்லாம் தலிபான் மாதிரி தானே இருக்கு", என்றார்.<br />
<br />
"என்ன இருந்தாலும் அண்ணாதுரை வெச்ச பேர் இல்லீங்களா ?", நான்.<br />
<br />
"அதுனாலே என்ன? நாடு இப்போ இருக்கற அழகை பார்த்தால் தலிபான் நாடு மாதிரிதான் தெரியுது ..", ஆணித்தரமாகச் சொன்னார்.<br />
<br />
"இப்போ என்ன ஆகி விட்டது அம்மா ?", கொஞ்சம் வியப்புடன் கேட்டேன்.<br />
<br />
"இன்னும் என்ன சார் ஆகணும்? இப்போ பாருங்க ...<br />
<br />
ஆப்கானிஸ்தான் லே பேச முடியாது,படிக்க முடியாது, எழுத முடியாது. பெண்கள் தனியே வெளிலே நடமாட முடியாது. அதே தானே இங்கேயும்.<br />
<br />
ஆப்கான் லே ரோடு கிடையாது.கரண்ட் கிடையாது.தண்ணி கிடையாது.தடி எடுத்தவன் தண்டால் காரன்.<br />
<br />
நம்ம ஊர்லேயும் அப்பிடித்தானே !<br />
<br />
புறம்போக்கு ஆளு மந்திரியோட உதவியாளர். நேற்று வரை கட்டை பஞ்சாயத்து பண்ணினவன் இன்னிக்கு பதிவிலே இருக்கான். அவன கைது பண்ண வேண்டிய போலீஸ் இப்போ அவனுக்கு சலாம் போடுது. கார் கதவை திறந்து விடுது.<br />
<br />
கரண்ட் குடுங்கப்பான்னு கேட்டு போராட்டம் பண்ணினா கைது பண்றாங்க. அமைச்சர் மகன் போலீஸ் கிட்டருந்து தப்பிச்சு போக்கு காட்டிகிட்டு இருக்கான். அப்பா அமைச்சர். மகன போலீஸ் தேடுது. மகன் இருக்கற இடம் அப்பாவுக்கு தெரியாது. இதை நாம நம்பணும்.<br />
<br />
உள்ளூர் விஷயமா வேலை செய்யுங்கப்பானு சொல்லி அமைச்சர் ஆக்கினா நம்ம அமைச்சர் டெல்லி பக்கமே போகாம உள்ளூர்லேயே தங்கிக்கறாரு.<br />
<br />
தமிழ் நாட்டுக்கு தண்ணி குடுங்கப்பான்னு டெல்லிலே போய் பேச வக்கில்லை. தமிழை வளர்க்கப் போறோங்கறாங்க.<br />
<br />
சரி, தமிழையாவது வளர்த்தாங்களான்னா அதுவும் இல்லை.ஏழாம் வகுப்பு மாணவன் ஒரு பத்து வரி எழுத முடியலே. அதுலே பத்து தவறு இருக்கு.<br />
<br />
ஆசிரியர்கள் என்ன பண்றாங்கன்னு பார்த்தா .. சொல்லவே நா கூசுகிறது. நவீன ராவணர்கள் மாதிரி செயல் படறாங்க. அவங்களை கேட்டா ஆசிரியர் போராட்டம்.<br />
<br />
பள்ளிக்கு வந்து பாடம் நடத்துங்கப்பான்னா ஏதோ அவதூறு சொன்னமாதிரி பேசறாங்க.மந்திரிங்க அவங்களுக்கு உதவராங்க.<br />
<br />
வேடிக்கை என்னன்னா, மந்திரிங்க வெறும் எட்டாம் வகுப்பு. அவங்க ஆசிரியர்களுக்கு உதவறாங்க.<br />
<br />
பெண் பிள்ளைங்களை பள்ளிக்கு அனுப்ப முடியுதா ? தெருவுலே இறங்கி நடந்தா விடலைப்பசங்க கேலி பண்றாங்க. கேக்க முடியாத வார்த்தைகள் பேசறாங்க. போலீஸ் லே போனா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ங்கம்மாங்கறாங்க. ரொம்ப கேட்டா இது ஸ்டூடெண்ட்ஸ் பிரச்சினையாயிடும்.அதுனாலே விட்டுடுங்கங்கறாங்க.<br />
<br />
"<span style="background-color: yellow;">பாதகம் செய்பவரைக் கண்டால் </span><br />
<span style="background-color: yellow;"> பயம்கொள்ள லாகாது பாப்பா</span>" னு பள்ளிலே சொல்லிட்டு வெளிலே பயந்து <br />
பயந்து வாழ முடியலே ஜட்ஜ் சார்.<br />
<br />
"<span style="background-color: yellow;">மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல </span><br />
<span style="background-color: yellow;"> மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா</span> " னு பெருமையா பள்ளிலே<br />
சொல்றோம். ஆனா வெளியே வந்த உடனே தலை குனிஞ்சு போறோம்.<br />
<br />
இந்த மாதிரி ரெட்டை வாழ்கை வாழ முடியலே ஜட்ஜ் தம்பி.<br />
<br />
சினிமா னு எடுக்கறாங்க. காண சகிக்கலே தம்பி. வீட்டுலே பிள்ளைகள் கூட<br />
உக்காந்து பார்க்க முடியலே. உடம்பெல்லாம் கூசுது. மன்னிக்கணும் தம்பி,<br />
நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலே இருக்கு.<br />
<br />
ஒரு வகையிலே இந்த விஸ்வரூபம் படத்தை தடை பண்ணினது நல்லது தான். என்னைக்கேட்டால் எல்லா தமிழ் படங்களையும் தடை பண்ணிடலாம்.<br />
<br />
முன்னே ஒரு காலத்துலே வெள்ளைக்காரங்க ஒரு தமிழ் படத்தை தடை பண்ணினாங்க.<br />
<br />
ஆனா நாங்க எல்லாம் அந்த சினிமா பார்த்தோம்.<span style="background-color: orange;">தியாக பூமி</span> னு பேரு. அதை நாங்க எல்லாரும் சின்ன பொண்ணுங்க சேர்ந்து பார்த்தோம்.அத பார்த்து சுதந்திரப் போர்லே பங்கு எடுத்துக்கிட்டோம். அங்கே தான் என் வீட்டுக்காரரை சந்திச்சேன்.இப்போ அவரு தியாகி பென்ஷன் விஷயமா அலைஞ்சுகிட்டு இருக்காரு.அது வேற கதை. <br />
<br />
இப்போ எடுக்கற படங்களப் பார்த்தா நாடே தேவதாசித்தனம் பண்ண வேண்டியது தான். அவ்வளோ தரம் தாழ்ந்து போய்ட்டோம். என்னப்பா இதுன்னு கேட்டா கருத்து சுதந்திரம் அப்படிங்கறாங்க .."<br />
<br />
பாரத மாதாவே மனிதஉருவில் வந்து பேசுவது போல் இருந்தது.<br />
<br />
மேலும் தொடர்ந்தார்.<br />
<br />
"பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்.<br />
<br />
"<span style="background-color: orange;">ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்</span><br />
<span style="background-color: orange;"> மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்</span> " ,<br />
<br />
என்று சிலப்பதிகாரதுலே இயற்கை வணக்கப்பாடல் எல்லாம் இருக்கு.<br />
<br />
அந்த புனிதநாள் அன்று தமிழ் நாட்டுலே தொலைகாட்சியில் நடக்கும் தமிழ்க்கொலை தாங்க முடியலே ஜட்ஜ் ஐயா.<br />
<br />
தமிழ் கலாச்சாரம் பற்றி கொஞ்சமும் தெரியாத பதினாறு வயது ஹிந்தி பொண்ணு - அந்த பொண்ணை பேட்டி காண்கிறார்கள். அந்த பொண்ணு ஒரு சினிமா நாயகியாம்.அரை குறை ஆடை அணிந்து அது திணறித் திணறி தமிழ் பேசி, நல்ல நாளும் அதுவுமா ஒரே அலங்கோலம்.<br />
<br />
பிறகு பட்டி மன்றம்ங்கற பேர்லே ஒரே கோமாளிக்கூத்து. பட்டிமன்றங்கள்லே ஒரு கம்பராமாயணம் உண்டா, சிலப்பதிகாரம் உண்டா .. ஒரு இலக்கியம் கிடையாது. ஒரே துணுக்குத் தோரணங்கள்.<br />
<br />
பிறகு தமிழ் பேர் கொண்ட ஒரு தமிழ் சினிமா. பேருக்கும் கதைக்கும் துளியும் தொடர்பு கிடையாது. வன்முறை, காமம்.. அவ்வளவு தான்.<br />
<br />
<br />
"<span style="background-color: orange;">இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த </span><br />
<span style="background-color: orange;"> வகுத்தலும் வல்லது அரசு</span> " <br />
என்று வள்ளுவர் சொன்னார்.<br />
<br />
இங்கே அரசாங்கங்கள் இது எதையும் செய்யாமல், மக்களுக்கு மது பானம் வழங்கறாங்க. வள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி சொல்லி இருக்கார். வள்ளுவர் வழியில் போறோம்னு சொல்லிட்டு இவுங்க கள் வியாபரம் பண்றாங்க.<br />
<br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 16px;">" </span><span style="background-color: orange;"><span style="color: #222222; font-family: arial, sans-serif; line-height: 16px;">இது பொறுப்பதில்லை-தம்பி! </span><em style="font-family: arial, sans-serif; font-style: normal; line-height: 16px;">எரி தழல் கொண்டு வா</em><span style="color: #222222; font-family: arial, sans-serif; line-height: 16px;">!</span></span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 16px;"> " னு பாரதியார் பாஞ்சாலி சபதத்துலே </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 15.994318008422852px;">சொன்ன</span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 15.994318008422852px;"> </span><span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 16px;">மாதிரி ஒரே கோபம் கோபமா வருதுங்க ஜட்ஜ் தம்பி.</span><br />
<br />
<br />
இந்த கண்றாவி நாட்டை தமிழ் நாடு என்று சொல்லி தமிழ்த்தாயை அவமானம் செய்யலாமா ?<br />
<br />
<span style="background-color: yellow;">அதனாலேதான் தயவு செஞ்சு கேட்டுக்கறேன், நம்ம மாநிலத்தோட பெயரை "தாலிபான் நாடு" என்று மாற்றி உத்தரவு போடணும்னு கேட்டுக்கறேன்".</span><br />
<br />
ஒரு மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது. <br />
<br />
<br />
<br />
<br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-18396037453625398922013-01-30T07:50:00.001-08:002013-01-30T07:58:49.088-08:00ஆமாம் கொலை தான் .... பாகம் 2 <a href="http://coffeewithamaruvi.blogspot.sg/2013/01/blog-post_29.html">காஞ்சிபுரம் சென்று</a> வந்த பிறகு மறு விசாரணை.<br />
<br />
ஓதுவார் வரவில்லை.அன்று சிவ ராத்திரியாம். ஆகையால் நாள் பூராவும் உண்ணா விரதமாம்.<br />
<br />
மறுநாள் வழக்கு விசாரணை.<br />
<br />
"நான் தான் சொன்னேனே ஜட்ஜ் தம்பி. நீங்க இவ்வளோ தூரம் கஷ்டப்பட வேண்டாம்.கொலை செஞ்சது நான் தான்".<br />
<br />
ஏனோ மனம் ஒப்பவில்லை.<br />
<br />
"ஐயா, நீங்க செஞ்சது கொலை தான் . ஆனா அதுக்கு தண்டனை ரொம்ப கடுமையா இருக்கும்.அதாலே மீண்டும் நினைவு படுத்தி சொல்லுங்க. அவுங்க உங்கள தாக்கினான்களா? அதுனாலே நீங்க ஆயுதம் எடுத்தீங்களா ?"<br />
<br />
தற்காப்புக்காக ஆயுதம் எடுத்தார் என்று காரணம் கற்பித்து தண்டனையை குறைக்கலாம் என்று முயற்சி செய்தேன்.<br />
<br />
"ஜட்ஜ் தம்பி, நான் சொல்றத கேட்டுக்குங்க.<br />
<br />
நான் நினைச்சிருந்தால் அவங்கள கொல்லாம இருந்திருக்கலாம்.ஆனா என்ன -<span style="background-color: orange;"> ஆயிரம் வருஷ வரலாறு போகும்.பல்லவ ராசா காலம் முன்னலேருந்து இந்த மக்களை காவல் காக்கற வடிவுடை அம்மா இங்கிலாந்து போயி ஒரு கண்ணாடி பேழைக்குள்ளே நிப்பாங்க</span>.<br />
<br />
ஆனா இங்கே இருந்தா, மக்களை நிதமும் பாத்துகிட்டே இருப்பாங்க.<br />
<br />
என்ன உபயோகம்னு கேக்கறீங்களா ? இந்த மக்களுக்கு ரொம்ப படிப்பறிவு எல்லாம் இல்லே.அரசாங்கமும் ஒன்னும் செய்யலே.வானம் பாத்த பூமி தான்.ஆனாலும் மக்கள் ஒரு ஒழுங்கு முறையோடு இந்த அம்மா முன்னாடி நடந்துப்பாங்க.<br />
<br />
பொய் சொல்ல மாட்டாங்க.திருட மாட்டாங்க.தேர்தல் நேரத்துலே அரசியல்வாதிங்க வந்தாகூட கோவில் கிட்டே வந்து பொய் சொல்ல மாட்டாங்க.அந்த மாதிரி அம்மா பாத்துப்பாங்க.<br />
<br />
ஊர்லே ஒரு கட்டுப்பாடு இருக்கும்.<br />
<br />
தெரியுங்களா சேதி ஐயா ? எங்கே ஊர்லே போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. யாராவது தப்பு செஞ்சா நேரே கைலாசநாதர் சந்நிதி தான், வடிவுடை அம்மா சந்நிதி தான்.அங்கே வெச்சு எவனாவது பொய் சொல்லுவான் ?<br />
<br />
இதெல்லாம் ஒரு நொடிலே அழிக்கப் பார்த்தாங்க பாவிங்க.<br />
<br />
அதாலேதான் விடக்கூடதுனு போட்டேன் ஒரே போடா. தேங்கா சீவுற மாதிரி.<br />
<br />
இந்த கட்டை கெடக்குதுங்க. இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ. போய்ச்சீற வேண்டியது தான். எழுவது வருஷ கட்டை இது.<br />
<br />
ஆனா வடிவுடை அம்மா ஆயிரம் வருஷமா நிக்கிறா. அது போகலாமா ? ஊரும் நாடும் போய்டுமே ஐயா.<br />
<br />
நீங்கே விதிக்க வேண்டிய தண்டனையா விதிங்க.எல்லாம் நீங்களா செய்யறீங்க ? செவனேன்னு இருக்கற சிவன் செய்யறான்.<br />
<br />
<span style="background-color: orange;">அன்ன ஒரே ஒரு வேண்டுகொளுங்க. தண்டனை காலம் முடியற வரைக்குமோ அல்லது தண்டனைகாலதுகுள்ளே என் காலம் முடியற வரைக்குமோ தினமும் கைலாசநாதர் வடிவுடியாமா முன்னாடி நின்னு ஒரு பதிகம் பாட முடியும்படியா நீங்க உத்தரவு போடணும்</span>.<br />
<br />
செய்வீங்களா தம்பி?"<br />
<br />
சொல்லிவிட்டு ஓதுவார் விடு விடு என்று பதிலுக்கு நில்லமால் இறங்கிச் சென்றார்.<br />
<br />
என் ராஜினாமா கடிதம் தயார் செய்ய தட்டேழுத்தாளரை அழைத்தேன்.<br />
<br />
ஓதுவாருக்கு வக்கீலாக அவதாரம் எடுக்க. <br />
<br />
"<span style="background-color: yellow;">ஞான பண்டித சுவாமி நமோ நாமே அருள் வாயே ...</span>" மனம் முணுமுணுத்தது.<br />
<br />
<br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-78556548219010772042013-01-29T07:01:00.001-08:002013-01-29T07:01:36.740-08:00ஆமாம்,கொலைதான். என்ன தப்பு ?"என்ன தம்பி பாக்கறீங்க ? ஆச்சரியமா இருக்கா ? ஆமாம். நான் தான் கொலை செஞ்சேன் .. இப்போ என்ன அதுக்கு ?", ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அவர்.<br />
<br />
நல்ல சிவப்பழமாக நின்றார். நெற்றியில் பட்டையாக திருநீறு,வெள்ளை வேட்டி, மேலே வெள்ளைத் துண்டு. ஒரு ஆறு அடி உயரம்.<br />
<br />
பார்த்தவுடன் எழுந்து நின்று கும்பிடத்தோன்றும்.<br />
<br />
நான் நீதிபதியாகையால் அவ்வாறு செய்ய முடியவில்லை.<br />
<br />
அவருக்கு வக்கீல் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நேரடியாக நானே விசாரணை செய்ய வேண்டிய ஒரு கட்டம்.<br />
<br />
குற்றப் பத்திரிகையில் எழுதியிருந்தது :<br />
<br />
பெயர் : சிவாகடாட்ச ஓதுவார்<br />
வயது : <b>72</b><br />
தந்தை பெயர் : (காலஞ்சென்ற) சிவ குருநாத ஓதுவார்<br />
முகவரி : கைலாசநாதர் கோவில் வீதி, காஞ்சிபுரம்.<br />
குற்றம் : கொலை <br />
<br />
"ஐயா , முழுக்க உண்மையும் சொல்றீங்களா ?", மரியாதையுடன் கேட்டேன்.<br />
<br />
அவர் சொன்னது இதுதான். பதிவு செய்து இருந்தேன்:<br />
<br />
"நாங்க ஓதுவார் சாதிங்க.பல நூறு காலமா அந்த சிவன் கோவில்லே ஓதுவார் வேலை செஞ்சு வரோம். வேலைன்னு சொல்லக் கூடாது.எங்க கடமை. இறைவன் தொண்டு அப்பிடின்னு தான் எங்க ஐயா சொல்லுவாரு. தொண்ணூற்றி ஏழு வயசு இருந்து, போன மாசம்தான் சிவபதம் சேர்ந்தாரு.<br />
<br />
"<span style="background-color: orange;">அம்மையே அப்பா ஒப்பிலா மணியே</span><br />
<span style="background-color: orange;"> அன்பினில் விளைந்த ஆரமுதே ..</span>" னு பாட தொடங்கினா நேரம் போறதே தெரியாம தேவாரம், திருவாசகம்னு ஓதிகிட்டே இருப்போம்.<br />
<br />
கண்ணு முன்னாடி சிவா பெருமான் தெரிவாரு. ஒடம்பு ஓஞ்சு போற வரை ஓதுவோம் நானும் என் தம்பியும். ஐயா கேட்டுகிட்டே ஆனந்தப் பாடுவாரு.<br />
<br />
அதும் திருவாதிரை, தை பூசம் னா கேக்கவே வேணாம். விடி காலிலே எழுந்து கோயில் போயிருவோம்.ராவுலே உச்சிகாலம் முடிஞ்சா பொறவுதான் வருவோம்.<br />
<br />
எங்களுக்கு பல்லவ ராசாவெல்லாம் நெறைய மானியம் கொடுத்து இருந்தாங்களாம். பல ஏக்கரா நன்செய் இருந்ததுன்னு சொலுவாங்க.அதுனாலே சாப்பாடு கஷ்டம் இல்லாமே அந்தே சிவனேன்னு சிவன் பத்தின திருமுறை எல்லாம் ஓதி வந்து மன நிறைவோடே இருந்தோமுங்க.<br />
<br />
இப்போ கொஞ்ச வருஷம் முன்னாடி நில உச்ச வரம்பு சட்டம் னு ஒரு சட்டம் கொண்டாந்து எங்க வயத்துலே அடிச்சாங்க.எல்லா நெலமும் போச்சு.ஒரு வேளை கஞ்சிக்கே சிவன் கோவில் லே யாராவது ஊத்தினாதான் உண்டுன்னு ஆகிருச்சு.<br />
<br />
இருந்தாலும் எங்க ஐயா, "அடேய், இது சிவனுக்கும் நமக்கும் உள்ள ஒரு தொடர்புடா. பூமியே அழிஞ்சாலும் நீ இந்த வேலையை விடக்கூடாதுன்னு சொல்லுவாரு. நாங்களும் அப்படியே வளர்ந்துட்டோம்.<br />
<br />
வயத்துலே பசி இருந்தாலும் ஒரு பதிகம் சொல்லி ஒரு மொடக்கு தண்ணி குடிச்சா போதும்னு வாழ்ந்து வந்தோமுங்க.<br />
<br />
அப்போ பார்த்து ஒரு கோஷ்டி வந்ததுங்க.நாலு பேர் வடக்கே இருந்து வந்தாங்க.தமிழ் விட்டு விட்டு பேசுனாங்க. பதிகம் பாடுங்க. பொட்டிலே பதிவு செஞ்சுக்கறோம்னு சொல்லி பணம் எல்லாம் குடுத்தாங்க. எங்க ஐயா தடுத்துப் பார்த்தாருங்க. தெய்வ குத்தமா போகுமடா , வேண்டாம்டானு சொன்னாருங்க.<br />
<br />
பாவி மனசு ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்படுதுங்க.<br />
<br />
அதுனாலே கோவில் உள்ளே போய் சித்தர் சமாதி கிட்டே உக்காந்து பதிகம் பாடினோமுங்க.ராத்திரிதான் அவுங்க பதிவு பண்ண முடியும். அப்போதான் நல்லா வரும்னு சொல்லி ராத்திரி பத்து மணிக்கு மேலே கோவிலுக்குள்ளே உக்காந்து பதிவு பண்ணினாங்க.<br />
<br />
பாடத் தொடங்கினா எனக்கு நேரம் போறதே தெரியாதுங்க.வெளிலே என்ன நடக்குதுன்னே தெரியாது. சுமார் ஒரு மணி நேரம் கழிச்சு பார்த்தா,ஒருத்தன் தான் இருக்கான்.மத்த மூணு பெரும் காத்து வாங்க போயிருக்காங்கன்னு சொல்றான்.<br />
<br />
நாடு சாமம் ஆச்சு.நானும் <span style="background-color: orange;">"உலகெல்லாம் உணர்ந்து</span>" லே தொடங்கி மங்களம் படற வரை வந்து <span style="background-color: orange;">"நாத விந்து கலாதி நமோ நமே ..</span>" திருப்புகழ் பாடி முடிச்சுட் டேங்க. மூணு பேரே இன்னும் காணோம்.<br />
<br />
சரி பணம் குடுங்கடானு கேட்டா அதெல்லாம் பின்னாலேனு சொல்றான்.எனக்கு ஒரு மாதிரி வந்துட்டு..<br />
<br />
அப்போ பாருங்க, அவங்கள்ளே ரெண்டு பேர் கோவில் உள்ளிருந்து ஏதோ சாக்கு மூட்டை மாதிரி தூக்கிட்டுப் போனாங்க.<br />
<br />
என்னடான்னு பார்த்தா, வடிவுடை அம்மன் விக்ரகமுங்க.<br />
<br />
தூக்கி வாரிப் போட்டுச்சுங்க. என்னடான்னு சொல்லதுக்கு முன்னே பெரிய கத்தியே காமிச்சாங்க.<br />
<br />
அடே கொள்ளைக் காரப்பசங்களா னு கத்திக்கிட்டே, ஒரு வேகத்துலே கருப்புசாமி அருவா இல்லேங்க, அதே ஒரே புடுங்கா தரைலேர்ந்து புடுங்கி , எப்படித்தான் அவ்வளவு சக்தி வந்துச்சோ தெரியலீங்க, ஒரு வீசு வீசுனேன். ரெண்டு தலை விழுந்துச்சு.இன்னொருத்தன் ஓடிட்டான்.<br />
<br />
இப்போ சொல்லுங்க, நான் செஞ்சதுலே என்னங்க தப்பு ?"<br />
<br />
வழக்கை ஒத்தி வைத்தேன். ஒருமுறை காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சென்று வரலாம் என்று.<br />
<br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-26471225482011429552013-01-28T07:16:00.002-08:002013-01-28T07:21:47.482-08:00ரங்கு (எ) ரங்க பாஷ்யம் "ஏண்டா கோந்தே, எப்போ வந்தே ?", கேட்டபடியே வந்தாள் மைதிலி மாமி.<br />
<br />
எனக்கு இருபது வயசு ஆனாலும் மாமிக்கு நான் "கோந்தே" தான்.<br />
<br />
மாமியின் கோந்தேயும் நானும் கிளாஸ் மேட்ஸ். அவன் பெயர் ரங்க பாஷ்யம். எங்களுக்கு ரங்கு.<br />
<br />
"ரங்கு எப்படி இருக்கான் மாமி ?", கொஞ்சம் பயத்துடனே கேட்டு வைத்தேன்.<br />
<br />
"இப்போ கொஞ்சம் தேவலாம். நீ செத்த வந்து பாரேன்..", மாமி சொன்னாள்.<br />
<br />
ரங்கு ஒரு ஜீனியஸ் என்பது போல் தான் இருந்தான். சின்ன வயதில் ஏகாம்பரம் சார் அவனை <b>Child Prodigy</b> என்று சொன்னது உண்மை.<br />
<br />
<b>10</b> வயதிற்குள் திவ்ய பிரபந்தத்தில் பாதிக்கு மேல் தலை கீழாக ஒப்பிப்பான். ரங்கராஜ பட்டாச்சாரியார் மகன் என்பதால் ஆகமங்கள் எல்லாம் அறிந்தான். பூஜை மந்திரங்கள் அவ்வளவும் அத்துப்படி.<br />
<br />
அவன் அப்பா போகாத நாட்களில் கோவில் பட்டர் வேலை இவனுடையது.நான் நண்பன் என்பதால் எனக்கு சர்கரைப்பொங்கல் ஒரு கரண்டி அதிகம் தருவான். ( பத்து தடவை சேவிக்க வேண்டும் அப்புறம் தான் தருவான் ).<br />
<br />
இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் என்னுடன் என் வகுப்பில் படித்தான்.படு சுட்டி.<br />
<br />
பிசிக்ஸ் கை வந்த கலை. அதுவே அவனுக்கு எதிரியானது. ஒரு நாள் பிசிக்ஸ் டீச்சர் <b>Neil Bohr</b> ன்<b> Atomic Theory </b> நடத்தினார்.<br />
<br />
"இது என்ன தியரி? ஆழ்வார்கள் அப்போவே சொல்லி இருக்காளே ..." என்று ஆரம்பித்தான்.<br />
<br />
"ஆழ்வார்கள் சொன்னதை ராமானுஜர் பின் பற்றி விசிஷ்டாத்வைதம் அருளினார். ஜீவாத்மா பரமாத்மா வேறே. அதுலே பரமாத்மா தான் இந்த யூநிவைரஸ்<b> ( Universe )</b> லே இருக்கற காஸ்மிக் எனெர்ஜி <b>(Cosmic Energy )</b>. ஜீவாத்மா நம்ப உடம்புக்குள்ளே இருக்கு. இந்த ஜென்மத்துலே மனுஷ உடல்.அடுத்த ஜென்மத்துலே வேற உடல். சட்டை போட்டுக்கற மாதிரி..<br />
<br />
ஒரு பசு மாட்டோட வாலே நுனிலே வெட்டி அத நூறு பங்கா பண்ணி, அதுலே ஒரு பங்கே எடுத்து அதே நூறு பங்கா பண்ணி, அதோட ஒரு பங்குலே மனசாலே ஒரு பங்காக்கினா அது என்ன அளவோ அது தான் ஜீவாத்மாவோட அளவு. அது கண்ணாலே பார்க்க முடியாது ..."<br />
<br />
இப்படி பேசி<b> Neil Bohr</b> நம்ம சித்தாந்தத்தை பின் பற்றி <b>COPY</b> பண்ணினான்னு சொல்லி அதனாலே ஸ்கூல்லேருந்து சஸ்பென்ட் ஆனான். பிசிக்ஸ் வாத்தியார் ஒரு நாஸ்திகவாதி.<br />
<br />
ரங்கராஜ பட்டாச்சாரியார் பிரின்சிபால் கால் பிடித்து மறுபடியும் அவனை சேர்த்துக்கொண்டார்.<br />
<br />
அதன் பிறகு ரங்கு யாருடனும் பேசுவதில்லை.என்னுடன் மட்டும் எபோதாவது பேசுவான். மற்ற நேரங்களில் கோவிலில் உட்கார்ந்து கொண்டு "<b> A Comparison between </b>ஆழ்வார் பாசுரம் <b>and the Theory of Relativity</b>" என்று ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பான்.<br />
<br />
ஒரு சிலர் ஜீனியஸ் என்றார்கள். <br />
<br />
பலர் "பையன் ஒரு மாதிரி.. குணசீலம் போய்ட்டு வாங்களேன் " என்று அறிவுரை சொன்னார்கள்.<br />
<br />
பத்தாம் வகுப்பு பாதியில் தான் அந்தத் திருப்பம் வந்தது. அது வரை யாருடனும் பேசாத ரங்கு, பெருமாளுடன் பேச ஆரம்பித்தான். ஆம். பாதி நேரம் கோவில் கருவறை வாசலில் நின்றுகொண்டு கையை ஆட்டி ஆட்டி பெருமாளுடன் ஏதேதோ பேசுவான். சில சமயம் அமர்ந்து கொண்டு நோட்ஸ் எடுப்பான்.<br />
<br />
ஸ்கூலில் <b>TC</b> கொடுத்து விட்டார்கள். பட்டாச்சாரியார் அழுது புரண்டு பார்த்தார்.ஸ்கூல் விடாப்பிடியாக இருந்துவிட்டது.<br />
<br />
வருடங்கள் பறந்தோடின. நான் காலேஜ் சேர சென்னை வந்து விட்டேன். ஒரு முறை ஊருக்குப்போன போது ரங்கு கொஞ்சம் மாறி விட்ட மாதிரி தெரிந்தது. அம்மா போகாதே என்றாள். இருந்தாலும் போனேன்.<br />
<br />
அவர்கள் வீட்டில் பெருமாள் பூஜை அறை சட்ட்று விசாலாமாக இருக்கும்.அவனுக்கு அந்த அறையையே கொடுத்து விட்டார்கள். மேதுவாகச் சென்று பார்த்தேன்.<br />
<br />
உரித்த கோழியாய் , பரட்டை தலையும், அழுக்கு வேஷ்டியுமாக<br />
<br />
"<span style="background-color: yellow;">முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண ..</span>." என்ற பாசுரத்தில் கூறப்படுவது யாதெனில், ஒரு காலத்தில் சூரியனே இல்லாமால் இந்தஉலகம் இருந்தது.அதனால் தான் ஆழ்வார் "<span style="background-color: yellow;">இருள் மண்டி உண்ண .." என்று கூறுகிறார்.<b> So he must be referring to the Ice Age. As there was no sun light, all the water had frozen and hence there was Ice every where. At the same time, there was no light , hence it was also dark all the time ..</b>.</span>" என்று உரக்க பேசிக்கொண்டும் அதே நேரத்தில் எழுதிக்கொண்டும் இருந்தான்.<br />
<br />
எதிரில் பெருமாள் விக்ரகம். <br />
<br />
என்னைப் பார்த்தவுடன்," டேய் நீ பிசிக்ஸ் லே தானே<b> Ph.D</b> பண்றே, நான் சொல்றேன் மில்கி வே <b>(Milky Way )</b> தான் பாற்கடல் னு. நீ என்ன சொல்றே ?" என்றான்.<br />
<br />
"இல்லைடா ரங்கு, நான் <b>Chartered Accountancy</b> படிக்கறேன். இந்த பிசிக்ஸ் எல்லாம் எனக்கு வரலே ", என்று சொல்லி சமாளித்தேன்.<br />
<br />
பிறகு பதினைந்து வருடங்கள் கழித்து இன்று தான் டெல்லியிலிருந்து ஊருக்கு வருகிறேன்.<br />
<br />
ரங்கு வீட்டை விற்று விட்டார்கள். பட்டரும் மாமியும் காலமாகி விட்டார்கள். ரங்கு என்ன ஆனான் என்றே யாருக்கும் தெரியவில்லை. மனம் கல்லானது.<br />
<br />
மறுபடி டெல்லி செல்ல சென்னை சென்ட்ரல் வந்தேன்.<br />
<br />
சென்ட்ரல் ஸ்டேஷன்ல் யாரோ உரக்க பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.<br />
<b><br /></b>
<b>"How is it that the cost of borrowing is more than the cost of lending ? Would this not induce inflation ? Can you explain the rationale ? "</b><br />
<br />
வழக்கமான குரலாக இருந்தது.<br />
<br />
கிழடு தட்டிய ரங்கு கையில் கழியுடன் நிற்கும் காந்தி சிலையிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.<br />
<br />
அவன் கையிலும் கழி இருந்தது.<br />
<br />
மக்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்.<br />
<br />
ஒரு தகர டப்பாவில் சில காசுகள் தெரிந்தன.<br />
<br />
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-87000640376996050172013-01-26T00:42:00.000-08:002013-01-26T00:45:58.393-08:00ஏம்ப்பா மூணு விரல் காண்பிக்கறே ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
"இன்னாபா, மூணு விரல் காமிக்கறே ?", நண்பர் நக்கலாக விசாரித்தார்.<br />
<br />
நான் பிராணாயாமம் செஞ்சதை அவர் இப்படி கேட்டார்.<br />
<br />
மூணு விரல் விஷயம் பத்திப் பார்ப்போம்.<br />
<br />
பெரியவங்கள்ளாம் <b>3</b> விரல் காண்பிச்சு பெரிய விஷயங்கள்லாம் சொல்லிருக்காங்க.<br />
<br />
இந்த விரல் யோகாவுலே பயன் படுகிறது.<br />
<br />
3 விரல் இப்பிடி வெச்சுப்பாங்க<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRqMbbMgxzYYxkygde6ZSCa6Rq6rxLfXCq0b7cPFaUZRFX2lPhrdE9m-MaV-CfBtWshu2ldnRG8HAj_0n3jnoyKzZIhISii3dAFFSl8FagmpqeeMUPGXYmXIgLGvEKLwn36ug31UqyqDVf/s1600/chin-mudra+(1).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRqMbbMgxzYYxkygde6ZSCa6Rq6rxLfXCq0b7cPFaUZRFX2lPhrdE9m-MaV-CfBtWshu2ldnRG8HAj_0n3jnoyKzZIhISii3dAFFSl8FagmpqeeMUPGXYmXIgLGvEKLwn36ug31UqyqDVf/s200/chin-mudra+(1).jpg" width="200" /></a></div>
<br />
ஆள் கட்டி விரல் வளைந்து நிமிர்ந்து நிற்கும் கட்டை விரல் தொட வேண்டும்.<br />
<div>
<br /></div>
<div>
நடு விரல், மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் விலகி இருக்க வேண்டும்.<br />
<br />
<br />
இதுக்கு சின் முத்திரை என்று பெயர்.<br />
<br />
<br />
இங்கு பெருவிரல் ( கட்டை விரல் ) இறைவனை(பரமாத்மா) க் குறிக்கிறது. <br />
<br />
ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவைக் குறிக்கிறது. <br />
<br />
நடுவிரல் ஆணவத்தையும், மோதிர விரல் கன்மத்தையும் , சுண்டு விரல் மாயையையும் குறிக்கிறது. <br />
<br />
அதாவது :<br />
<br />
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;">பரமாத்மா மேல் நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. ஜீவாத்மா பரமாத்மாவை </span></span><br />
<span style="background-color: white; font-family: sans-serif; line-height: 19.1875px;">அடைய வேண்டுமானால், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் விட வேண்டும் என்பது அர்த்தம்.</span><br />
<span style="background-color: white; font-family: sans-serif; line-height: 19.1875px;"><br /></span>
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;">யோகிகள் எல்லாம் இப்படித்தான் உபதேசம் செய்வாங்க. </span></span><br />
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;"><br /></span></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEvlFlzFL1CoqH_m5pnMiJrtvAgCFu5OFGkq4HO62dQqPOXJRR_ZpOfh2YdleMIFGxXCPYAsd9KK7_IGThW0oLPRYanjza6_wPcmea-Y1DWtouk-AoZXxt11MS1USBBGGNGRU1c4MbFlyB/s1600/chin-mudra.jpg" imageanchor="1"><img border="0" height="133" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEvlFlzFL1CoqH_m5pnMiJrtvAgCFu5OFGkq4HO62dQqPOXJRR_ZpOfh2YdleMIFGxXCPYAsd9KK7_IGThW0oLPRYanjza6_wPcmea-Y1DWtouk-AoZXxt11MS1USBBGGNGRU1c4MbFlyB/s320/chin-mudra.jpg" width="200" /></a></div>
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;"><br /></span></span>
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;">இறைவன் குரு வடிவாக இருந்து உபதேசம் செய்யும்போது காண்பிச்ச முத்திரைனும் சொல்லுவாங்க ( தக்ஷிணாமூர்த்தி உருவில் சிவ பெருமான் சின் முத்திரை காண்பித்து மௌன உபதேசம் செய்தான் என்பது நம்பிக்கை).</span></span><br />
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;"><br /></span></span>
ஆனா இதெல்லாம் பகுத்தறிவில்லாத இந்து மதத்துலே தானே.<br />
<br />
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;">பின்னே இவர் ஏன் சின் முத்திரை காண்பிகிறார் ?</span></span><br />
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;"><br /></span></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpfg2oS7DPnx55gio5tnDAIlKUAZSORjuRb4xFQoGr4v75kUAdoqP1NU3LMRP39JSSoyMuEVwHsQ48htDoVlEdStAgnbU7uL-zNkcHw8bwkTGKzVxgMLyqu-3NmRWreuGt7MOgVa1IUu6k/s1600/kveeramani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpfg2oS7DPnx55gio5tnDAIlKUAZSORjuRb4xFQoGr4v75kUAdoqP1NU3LMRP39JSSoyMuEVwHsQ48htDoVlEdStAgnbU7uL-zNkcHw8bwkTGKzVxgMLyqu-3NmRWreuGt7MOgVa1IUu6k/s1600/kveeramani.jpg" /></a></div>
<span style="font-family: sans-serif;"><span style="line-height: 19.176136016845703px;"><br /></span></span>
<br />
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-76533589980947612352013-01-25T07:52:00.000-08:002013-01-25T07:54:11.678-08:00நம்பினால் நம்புங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
பயோ டேட்டா </div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7xLL3tVO5XLSVG0Bw8Sea5oyp50vBiEgj04bEh9UcnTsTMHwfg6rcNB-G4umcpfciNZk3wWWKZfUOUjRF3l0mcumb2zgTLSaCX81XQyqB412VFKXNzl2aUGJOaAd4P8EHeXPg_10CsYfR/s1600/Manik+Sarkar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7xLL3tVO5XLSVG0Bw8Sea5oyp50vBiEgj04bEh9UcnTsTMHwfg6rcNB-G4umcpfciNZk3wWWKZfUOUjRF3l0mcumb2zgTLSaCX81XQyqB412VFKXNzl2aUGJOaAd4P8EHeXPg_10CsYfR/s1600/Manik+Sarkar.jpg" /></a></div>
<br />
<br />
<div style="text-align: left;">
பெயர் : மணிக் சர்க்கார்</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
தொழில் : முதல் அமைச்சர் ( திரிபுரா, இந்தியா )</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
உப தொழில் : இல்லை<br />
<br />
பதவிக் காலம் : 1998 முதல் இன்று வரை </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
படிப்பு : சம்பாதிக்கத் தெரியாத அளவு</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சம்பளம் : ரூ. <b>5,000</b> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
பேங்க் பலன்ஸ் : ரூ <b>9,720</b> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சொத்து : ரூ <b>2,50,000</b> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இவரும் இந்தியரே.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இப்போ தெரியுதா இவரப்பத்தி தமிழ் நாட்டுலே ஏன் யாருக்குமே தெரியலேன்னு ?</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-83943795367760928242013-01-24T08:30:00.004-08:002013-01-24T09:32:42.604-08:00வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... "ஏம்பா உனக்கு வெக்கமா இல்லே ? " ஹிந்தி நண்பர் ஒருவர் ஹிந்தியில் கேட்டார்.<br />
<br />
"எதுக்கு வெக்கப்பட..?", புரியாமே முழிச்சேன் , வழக்கம் போலே ... <br />
<br />
எனக்கு ஒண்ணுமே புரியலே .<br />
<br />
"இப்பிடி மொட்டையா சொன்னா எப்படிங்க?" - தெரிஞ்ச ஹிந்தி லே உளறினேன்.<br />
<br />
வெக்கப்பட எவ்வளவோ இருக்கு , எதுக்குன்னு கேக்காம வெக்கப்படறது பகுத்தறிவு இல்லை. இது கூடவா தெரியாது எனக்கு ?<br />
<br />
அவர் ஒரு படம் காண்பிச்சார்.<br />
<br />
அது தான் இது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEhclozwKkS7K4C3ROfoX71w3d2Kv884bGsU9mBa_jqq4bDmAGHst5u-Y0QgeadjF0pM0-akQOLUTaf7iErimlpJgNB_Hv-DCN8OHm5EhvP0ytfoOf9MnIeP5Q4lu1f11FHM7x61lq9cxg/s1600/Temple.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEhclozwKkS7K4C3ROfoX71w3d2Kv884bGsU9mBa_jqq4bDmAGHst5u-Y0QgeadjF0pM0-akQOLUTaf7iErimlpJgNB_Hv-DCN8OHm5EhvP0ytfoOf9MnIeP5Q4lu1f11FHM7x61lq9cxg/s1600/Temple.jpg" height="217" width="320" /></a></div>
<br />
<br />
<div style="text-align: left;">
</div>
"இது கோவில்", அவர் சொன்னார், ஹிந்தி லே தான்.<br />
<br />
"அதான் தெரியுதே, இப்போ என்ன அதுக்கு?", கடுப்பானேன் நான்.<br />
<br />
கோவில் தெரியாதா எனக்கு?<br />
<br />
இந்த மாதிரி ஓட்டை ஓடைசல் கோவில் எவ்வளோ இருக்கு தமிழ் நாட்டுலே. என்கிட்டயேவா ?<br />
<br />
"இதை காப்பத்திட்டாங்க ..", என்றார் அவர்.<br />
<br />
"யோவ், கோவிலை எங்கயாவது காப்பாதுவாங்களா?", பகுத்தறிவு பேசினேன் பெருமையுடன்.<br />
<br />
"அறிவே இல்லாத உன்னைப் பெற்ற தாயை நான் பார்த்து வணங்க வேண்டும்" ங்கற மாதிரி அவர் ஏதோ ஹிந்தியில் சொன்னார்.<br />
<br />
"இந்த கோவிலை யார் கட்டினாங்க தெரியுமா ? " - அவர்<br />
<br />
"யாராவது வேலை இல்லாதவனா இருப்பான் " - நான்<br />
<br />
"ராஜேந்திர சோழன் கட்டினான் " - அவர்<br />
<br />
"சரி என்ன இப்போ " - நான்<br />
<br />
"எப்போ கட்டினான் தெரியுமா"<br />
<br />
"தெரிஞ்சு இப்போ என்ன ஆகப்போகுது " - நான்<br />
<br />
"ஏழாம் நூற்றாண்டு "<br />
<br />
"......... "<br />
<br />
"இந்த கோவிலை யார் பாடினாங்க தெரியுமா ?" - அவர்<br />
<br />
"யாரு<span style="background-color: orange;"> <b>SPB</b>, <b>யேசுதாஸ்</b>, </span><b><span style="background-color: orange;">சித்ரா</span> </b>? யாரு, யாரு ?" - நான்<br />
<br />
கெட்ட வார்த்தை சொன்னார். ( புரியலை)<br />
<br />
"அப்பர் பாடினாரா ? " - அவர்<br />
<br />
"யாரோட அப்பா ?" - நான்<br />
<br />
மறுபடியும் கெ. வார்த்தை - ஹிந்தியில் ( தப்பிச்சேன் )<br />
<br />
"சைவ சித்தாந்த தூண் - நாலு பேர்லே ஒருவர் - திருஞானசம்பந்தர் சுவாமிகள்" - அவர்.<br />
<br />
"மியூசிக் யாரு ?", - நான்<br />
<br />
இந்த முறை கெ.வார்த்தை புரிந்தது. தமிழில் திட்டினார்.<br />
<br />
"இந்த கோவிலை இடிக்க இருந்தாங்களாம்" - அவர்.<br />
<br />
"இப்போ இடிக்கலையா ?" - நான்<br />
<br />
"இல்லை. மக்கள் போராட்டம் நடத்தி நிறுத்திட்டாங்கலாம்".<br />
<br />
"யாரு இடிக்கப்பார்த்தாங்க? யாராவது ஆப்கானிஸ்தான்லேருந்து வந்தாங்களா ?" - நான் . ( என் பகுத்தறிவு அவ்வளவு தான் ).<br />
<br />
திட்டி முடித்தபின் தொடர்ந்தார்.<br />
<br />
"இல்லை. மத்திய அரசு".<br />
<br />
"எதுக்கு இடிக்கணும்?" - நான்<br />
<br />
"ரோடு போடறதுக்கு" - அவர்.<br />
<br />
"அடச்சே, அவ்ளோ தானா ? ரோடு போடறதுக்கு இடிக்க பார்த்தாங்க. வேலை இல்லாத மக்கள் எதிர்த்தாங்க. அதுனாலே இடிக்கலே. அதானே " - நான்<br />
<br />
தற்போது சுத்த ஹிந்தியில் உரத்த குரலில் அவர் பின்வருமாறு :<br />
<br />
"அறிவு கெட்டவனே , உனக்கு வெக்கமா இல்லே ? <b><span style="background-color: orange;">1300</span> </b>வருஷ கோவில்.<b> </b> <span style="background-color: orange;">ராஜேந்திர சோழன் கட்டினது</span>. இடிக்கறான். என்னமோ கொசு கடிச்சா மாதிரி உக்கார்ந்து இருக்கே !<br />
<br />
புலியை முறத்தாலே விரட்டினா தமிழ் பெண் னு பெருசா பேசறீங்க, இங்கே ஒரு<span style="background-color: orange;"> கலாச்சாரமே பாழாப் போகுது </span>ஒரு உணர்ச்சியும் இல்லாம இருக்கீங்களே , நீயெல்லாம் ..." <br />
<br />
இப்படி பல அர்ச்சனை செய்தார். நான் அசருவேனா என்ன ?<br />
<br />
"ஒரு கோவில் தானே ? போனா போகுது. அதுவே <b style="background-color: orange;">1300</b> வருஷம் பழசு. போனா போகட்டுமே. இதுக்கு போய் அலட்டிக்கலாமா ?<br />
<br />
நானே 'விஸ்வரூபம்' முதல் நாள் முதல் ஷோ போக முடியலேன்னு சோகமா இருக்கேன். இப்போ போய் கோவில், கலாச்சாரம், அது இதுன்னு ..<br />
<br />
இதுக்குதான் இந்த ஹிந்தி காரங்க கிட்டே பேசவே கூடாது. அவுங்க ஏதாவது கிளப்பி விட்டுடுவாங்கனு எங்க தலைவருங்கல்லாம் சொல்லி இருக்காங்க.."<br />
<br />
"டேய், உனக்கு உண்மையாவே வெக்கமா இல்லை ?" - அவர்.<br />
<br />
"அட போங்க சார். தமிழ் நாட்டுலே ஆயிரம் கோவில் இருக்கு அவ்வளவும் ஆயிரம் வருஷம் பழசு. அதெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? இடிஞ்சு போய் பாழா கெடக்கு.<br />
<br />
அவ்ளோ ஏன்?<br />
<br />
தேரழுந்தூர்னு ஒரு ஊரு. மயிலாடுதுறை பக்கமா இருக்கு. <b>108</b> திவ்ய தேசங்கள்ளே ஒண்ணு. ஆழும் பாழுமா போய் இப்போ தான் <b style="background-color: yellow;">Retire</b> ஆன மூணு வேலை இல்லாதவங்க சேர்ந்து ஊர் ஊரா போய் வசூல் செஞ்சு, ஆளபுடிச்சு மராமத்து வேலை செஞ்சு கொஞ்சம் அரசாங்க உதவி வாங்கி இப்போ கோவில் கோவிலா இருக்கு. போன மாசம் போன பொது ஊர்காரங்க சொன்னங்க.<br />
<br />
அதே ஊர்லே கம்பர் பிறந்த இடம் இருக்கு.<b> <span style="background-color: yellow;">ASI - Archaeological Survey of India </span>-</b> அதாங்க, தொல் பொருள் ஆய்வுத்துறை - அவங்க கீழே வருது. வெறும் மண் மேடா இருக்கு. அதுலே காமெடி என்னன்னா<br />
<br />
<b style="background-color: white;"> </b><span style="background-color: yellow;"><b> "This place is under the custody of The Archaeological Survey Of India "</b> </span><br />
<br />
ன்னு பலகை வேறே. அங்கே ஆடு மாடு மேஞ்சு கிட்டு இருக்கு. அதுக்கு பேரே கம்பர் மேடு தான்.<br />
<br />
கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும்னு சொன்னோம். இப்போ கம்பர் வீடே இல்லாம மேடா இருக்கு. இதோ பாருங்க இதான் அந்த இடம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkjbIdTIaL_grw71Rm55Olc4_Tg6l-4soZEOTLBtcMoUx56_rew9dCHZmHCiFXjp3cFdX_Z0QOGlrf-X5NXphyBIJd5km6woDB_YVTr7v-1nSyzJjrLRn5taYxpnIsAJT7-JkE8cz3Ri28/s1600/kambar+birth+place+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkjbIdTIaL_grw71Rm55Olc4_Tg6l-4soZEOTLBtcMoUx56_rew9dCHZmHCiFXjp3cFdX_Z0QOGlrf-X5NXphyBIJd5km6woDB_YVTr7v-1nSyzJjrLRn5taYxpnIsAJT7-JkE8cz3Ri28/s1600/kambar+birth+place+1.jpg" /></a></div>
<br />
<br />
தாய் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் னு சொன்னோம் .<br />
<br />
ஆனா தமிழ் வளர்த்த கம்பர் பிறந்த இடத்த மறந்துட்டோம் .<br />
<br />
இந்த நாட்டுலே போய் நீங்கே ஒரு கோவில் காப்பாத்திடோம்னு சொல்றீங்க".<br />
<br />
அவர் வாய் அடைத்து நின்றிருந்தார்.<br />
<br />
அந்த தைரியத்தில் மேலும் தொடர்ந்தேன்.<br />
<br />
"எல்லாம் சரி. கோவில் நிலங்கள எல்லாம் எவனோ சாப்பிடறானே, அதுக்கு என்ன செஞ்சோம் ?<br />
<br />
கோவில் லே <span style="background-color: yellow;">பெருமாளை சேவிக்க காசு வாங்கறாங்களே அரசாங்கதுலே</span>, ஏழை மக்கள் எப்படி வருவாங்க கோவிலுக்கு ?<br />
<br />
கோவில் லே <span style="background-color: yellow;">வேலை செய்யறவங்களுக்கு சம்பளம்</span> கொடுக்கறோமா ? என்ன செஞ்சோம் ? போராட்டம் நடத்தினோமா ?<br />
<br />
கோவில் சிலை எல்லாம் திருட்டு போகுதே. நமக்கு என்ன அதைப்பத்தி னு இருக்கோமே ?<br />
<br />
<span style="background-color: yellow;">சாமி நம்பிக்கையே இல்லமே இருக்காங்களே அவங்களை கோவில் அறங்காவலர்</span> னு வெச்சிருக்கோமே ? போராட்டம் நடத்தினோமா ?<br />
<br />
இது எதுக்கும் ஒண்ணும் செய்யலே. ஏன்னா நாங்க <span style="background-color: yellow;">மறத்தமிழர்கள்</span>. எங்களுக்கு மானம் , ரோஷம் எல்லாம் <span style="background-color: yellow;">மரத்துப் </span>போச்சு.<br />
<br />
<span style="background-color: yellow;">இப்போ எல்லாம் எங்களுக்கு தேவை ஒரு சினிமா, ஒரு நடிகை, ஒரு நடிகன், அப்புறம் <b>24</b> மணி நேரமும் <b>TV</b>.</span><br />
<br />
இப்போ <span style="background-color: yellow;">விஸ்வரூபம் படம்.</span> அது தான் முக்கியம்.<br />
<br />
இது தெரியாமே வெக்கமா இல்லையானு ஒரு கேள்வி கேக்கறீரோ ?<br />
<br />
<span style="background-color: orange;">வெக்கமா ? எங்களுக்கா ? அடப்போங்கையா... "</span>.<br />
<br />
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.<br />
<br />
நண்பரைக் காணவில்லை. கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு ஒரு பிளாஸ்டிக் கிண்ணம் வழங்கப்படும். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-57446795275143396612013-01-20T00:22:00.000-08:002013-01-20T00:39:43.600-08:00நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
--------------------------------------------------------------------------------------------------<br />
<br />
கொஞ்ச நாளாவே உலகத்துலே எல்லாருமே ரொம்ப நல்லவங்களா மாறிட்ட மாதிரி ஒரு எண்ணம் வருது.நமக்கு தெரிஞ்சவங்க இல்லை. முன் பின் தெரியாத அந்நியர்கள் கூட ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க.<br />
<br />
இதுக்குக் காரணம் எனக்கு வர பல <span style="color: red;"><b>E-MAIL</b></span>s தான்.<br />
<br />
பேர் ஊர் தெரியாத பல பேர் எனக்கு பணம் அனுப்ப ஆசைப்படறாங்க. விடாம என்னை துரத்தித் துரத்தி பேங்க் அக்கௌன்ட் நம்பர் கொடுனு அன்பு தொல்லை தாங்க முடியலே.<br />
<br />
அதுலே முக்கியமான விஷயம் - அவுங்களுக்கு ஆப்பிரிக்காலே ஒரு பெரிய லாட்டிரி விழுந்துருக்கு. அவுங்களுக்கு பேங்க் அக்கௌன்ட் இல்லாததாலே என்னோட பேங்க் அக்கௌன்ட் லே பணம் போட முடிவு செஞ்சிருக்காங்க.அதுக்கு என்னோட அக்கௌன்ட் நம்பர் கேக்கறாங்க.<br />
<br />
இது<span style="background-color: yellow;"> கலி காலம்</span> தானா ? ஏதோ <span style="background-color: yellow;">த்ரேதா யுகம்</span> மாதிரி இருக்கு. மனுசங்க இவ்வளோ நல்லவங்களா மாறிட்டாங்களே !<br />
<br />
அவ்வளவு பணத்தையும் எனக்கே எனக்கு அனுப்ப அவுங்க <span style="color: red;"><b>Just Fund Transfer</b></span> <span style="color: red;"><b>Charges</b></span> மட்டும் கேக்கறாங்க. அதுவும் என்ன ஒரு<span style="background-color: #9fc5e8; color: red;"> <b>250</b></span> டாலர் தான். இதை கட்டினா எனக்கு<span style="color: red;"><b> </b><span style="background-color: #9fc5e8;"><b>2,500,000</b> </span></span>டாலர் அனுப்பறாங்க. அடேயப்பா எவ்ளோ பணம்?<br />
<br />
இது தெரியாம நம்ம<span style="color: red;"><b> 2G </b></span>ராஜா ( தமிழில் இராசா ) தப்பு தப்பா தப்பு பண்ணிட்டு திரு திருன்னு முழிசிண்டிருக்கார். கூடவே கனிமொழி அம்மாவும் அதே மாதிரி முழிக்கறாங்க.<br />
<br />
என்ன இருந்தாலும் பகுத்தறிவுக்கடவுள் எனக்கு அருள் பண்ணின மாதிரி அவங்களுக்கு பண்ணலே..<br />
<br />
<span style="background-color: #ffe599;">கொடுக்கற தெய்வம் கூரையை பிச்சிண்டு கொடுக்கும்னே சொல்லுவாங்களே, இதானா அது ? இப்போ <span style="color: red;"><b>EMAIL</b></span>ஐ பிச்சிண்டு கொட்டறது.</span><br />
<br />
இப்பிடி ஒரு ரகம் மக்கள் இருக்க இன்னொரு ரகம் இன்னுமே சூப்பர்.<br />
<br />
<span style="background-color: #ffd966;"><span style="color: blue;">ரேஷ்மி குப்தா, சுபத்ரா தேஷ்பாண்டே, மதுமிதா முதலியார் . அஞ்சலி தேஷ்முக், ஷர்மிளா ஐயர் , சுபாஸ்ரீ படேல், பிரியா சென்குப்தா, பல்லவி கபூர்,சோனம் தீட்சித், கன்வல்ஜித் கவுர், கிறிஸ்டினா, ஸ்மிதா அரோரா,ரூபாலி பானேர்ஜி .....</span></span><br />
<br />
இவுங்கல்லாம் யாருன்னு கேக்கறீங்களா ?<br />
<br />
எனக்கு <span style="background-color: #fff2cc; color: red;"><b>EMAIL</b></span> லே <b style="background-color: red;">PROPOSE</b> பண்ணினவங்க.அதுவும் எப்படி ?<br />
<br />
Sample சில வரிகள் :<br />
<br />
<b><span style="background-color: #f4cccc; color: red;">"Honey I am waiting for your reply "</span></b><br />
<b><span style="background-color: #f4cccc; color: red;">"We had a good time. Time to meet up again ?"</span></b><br />
<b><span style="background-color: #f4cccc; color: red;">"Mere Yaar, Long time.Shall we ..?"</span></b><br />
<b><span style="background-color: #f4cccc; color: red;">"Missing you since last week. Shall we meet up in Carlton, NYC this week end?"</span></b><br />
<br />
நீங்களே சொல்லுங்க.. நான் என்ன செய்யறது?<br />
<br />
<span style="background-color: yellow;">நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் ? </span><br />
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-52480349058471887462013-01-19T00:36:00.002-08:002013-01-19T00:36:37.933-08:00இன்னாபா அய்யர் தானே நீ ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"நீ அய்யர் இல்லே ? என்னமோ ஐயங்கார்னு எழுதி இருக்கே ? பாப்பாரவுகதானே நீங்கள்ளாம் ? இப்போ ஏன் கொழப்புறே ?," - என் நண்பர் கேட்டார்.<br />
<div>
<br /></div>
<div>
அவருக்குத் தெரியாது குழப்புறதுதான் நம்ம வேலைன்னு...</div>
<div>
<br /></div>
<div>
ஐயங்கார்குள்ளே இருக்கற குழப்பங்கள் போதாதுன்னு இன்னும் அய்யர் ஐயங்கார் குழப்பமே தீர்ந்தபாடில்லை. </div>
<div>
<br /></div>
<div>
ஐயங்கார் ஒரு வித்தியாசமான சாதி. அவுங்க வீட்டுலே தமிழ் சும்மா பூந்து விளையாடும்.ஆனா அவுங்களை அய்யர்னு சொல்லி நம்ம தமிழ் நாட்டுலே அவங்களையும் தமிழுக்கு விரோதின்னு சொல்லி வர்றாங்க நம்ம தமிழ் தலைவர்கள்.( <span style="color: blue;">அய்யர் தமிழ் விரோதி இல்லைனு இன்னொரு தடவை பார்க்கலாம். மொத்தமா அப்போ திட்டு வாங்கிக்கறேன்</span> ).</div>
<div>
<br /></div>
<div>
இப்போ விஷயத்துக்கு வருவோம்.</div>
<div>
<br /></div>
<div>
ஐயங்கார் மக்கள் நாமம் போட்டுப்பாங்க ( மத்தவங்களுக்கு இல்லை ). இதுலே ஒரு வசதி. மத்தவங்க போடறதுக்கு முன்னாடி நாமளே போட்டுக்கறது நல்லது தானே ஒரு <b><span style="color: red;">ANTI-VIRUS</span></b> மாதிரி !<br />
<br />
நாமம் - பெருமாளோட பெயர்களைச்சொல்லி போட்டுக்கறது. திருமண் அப்பிடின்னு சொல்றது உண்டு.ஸ்ரீ ரங்கம் காவேரிக்கரை அருகே கிடைக்கும் ஒரு வகையான களி மண் என்று கேள்வி. ( <span style="color: blue;">தலைக்குள்ளே தான் களி மண் இருக்கே வெளிலேயும் எதுக்குன்னு பகுத்தறிவு பேசலாம்.</span><span style="color: red;"> நல்ல POINT</span> ).<br />
<br />
ஐயங்கார் விபூதி இட்டுக்க மாட்டாங்க. சிவன் கோவிலுக்குப் போக மாட்டாங்க.பல பேர் விநாயகர் சதுர்த்தி கூட கொண்டாட மாட்டாங்க.</div>
<div>
<br /></div>
<div>
விஷ்ணு கோவிலுக்கு போறாங்களோ இல்லையோ தினமும் வீட்டுலே <span style="background-color: orange;">சாத்துமுது</span> பண்ணுவாங்க, விசேஷ நாட்கள்லே<span style="background-color: orange;"> திருக்கண்ணமுது</span> செய்வாங்க.<br />
<br />
கறி ( காய் கறி ) - பொரியல் கிடையாது/- <span style="background-color: orange;">கறி அமுது</span> தான்..<br />
<br />
சமையல் கிடையாது.,ஆனா <span style="background-color: orange;">தளிகை</span> பண்ணுவாங்க.<span style="background-color: orange;">தளிகை பண்ற உள்</span> - அதாங்க தமிழ்லே <span style="color: red;">KITCHEN</span> னு சொல்லுவோமே அது தான். இப்போவெல்லாம் <span style="background-color: orange;">தளிப்பண்றஉள்</span> அப்டின்னா ஏதோ <span style="color: red;">TALIBAN</span> மாதிரி இருக்குனு சொல்லிட்டு <span style="color: red;">KITCHEN</span> என்று தமிழ் வார்த்தை பயன்பாடு அதிகமா இருக்கு. <br />
<br />
தளிகையை பெருமாளுக்கு <span style="background-color: orange;">அம்சே</span> பண்ணுவாங்க.<br />
<br />
மேலே சில புரியாத வார்த்தைகள் இருக்கில்லையா ? அத்தனையும் தமிழ் வார்த்தைகள். உதாரணமா :<br />
<br />
சாத்துமுது - சாறு + அமுது. ( தக்காளி, புளி இதோட சாறுலேருந்து செய்யறதாலே சாற்று அமுது - ஆண்டவனுக்கு படைபதால் அமுது ஆகிறது.<br />
அதுலேயும் படையல் கிடையாது. அம்சே பண்ணுறதுதான்.<br />
<br />
<span style="background-color: orange;">அம்சே பண்றது</span> - அமுது செய்யப் பண்ணுவது - இறைவனுக்கு உணவை அளிப்பது.<br />
<br />
<span style="background-color: orange;">திருக்கண்ணமுது</span> - திரு + கண்ணன் + அமுது. கண்ணபிரான் சாப்பிட்டதால் அது அமுது ஆனது.<br />
<br />
கூட்டு - இது ஐயங்கார் அகத்துலே<span style="background-color: orange;"> நெகிழ் கறி அமுது</span> அப்பிடின்னு அழைப்பாங்க. இந்த ஒரு வார்த்தை இப்போ உபயோகத்தில் இல்லை.<br />
<br />
ஆத்துக்குங்கற வார்த்தை ரொம்ப பிரபலம். தமிழ் லே அகம் - உள்ளே ( அக நானூறு, அகத்தின் அழகு .. ). அதுனாலே வீடு அகம் ஆனது.<br />
<br />
அதே போலே அக்கார அடிசில், , புளியோதரை ,எள்ளோரை ( எள் சாதம்) - இப்படி பல.<br />
<br />
வீட்டுக்கு வரும் பெரியவரை வரவேற்று ஏள்ளப்பண்ணுவார்கள். <span style="background-color: orange;">எழுந்தருளப்பண்ண வேண்டும் </span>என்பதை எள்ளப்பண்ணனும் என்று இப்போது சொல்கிறார்கள்.<br />
<br />
நீங்கள் என்று சொல்வது மரியாதைக் குறைவு அதனால் தேவள் ( தேவரீர்கள் ) என்று சொல்வார்கள்.<br />
<br />
எப்பவும்<span style="background-color: orange;"> நான்</span> கிடையாது. <span style="background-color: orange;">அடியேன்</span> தான். ( அடியேன் ராமானுஜ தாசன் ...).<br />
<br />
வைஷ்ணவ ஆழ்வார்கள் 12 பேர். இவர்களில் பிராமணரல்லாத ஆழ்வார்கள் பலர்.பெண் ஆழ்வாரும் உண்டு ( ஆண்டாள் ). அத்தனை ஆழ்வாருக்கும் கோவிலில் சந்நிதி உண்டு.ஒரு வகையில் ஒரு முற்போக்கான சமுதாயமாக இருந்திருக்கிறது. ராமானுஜர் தான் முதல் சீர்திருத்தவாதி என்பது மறைக்கப்படும் உண்மை ( வாழ்க பகுத்தறிவு ).<br />
<br />
<span style="color: red;">108</span> திவ்ய தேசம் ஐயங்கார்களுக்கு முக்கியம்.பெருமாள் கோவில்கள் 108 ஐ<br />
ஆழ்வார்கள் பாடினார்கள். அவை திவ்ய தேசம் ஆயின.இமலயமலையில் பத்ரி மற்றும் நைமிசாரிண்யம் முதல் ஆந்திர மாநிலத்தில் அஹோபிலம் தொட்டு தமிழ் நாட்டில் பல கோவில்கள் சேர்த்து , கேரளா மாநிலம் வரையில் ஆழ்வார்கள் பாடின திவ்ய தேசங்கள்.<br />
<br />
இப்போது <span style="color: red;">109</span> ஆவது திவ்ய தேசம் - <span style="color: red;">அமெரிக்கா</span>.<br />
<br />
ஐயங்கார் குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஐயங்கார் என்பதால் மட்டும் அவர்களுக்கு வேலையும் படிப்பும் மறுக்கப்படாததால் அமெரிக்காவில் இவர்கள் பெருமளவில் குடியேறிவிட்டனர். அதோடு கோவில்களும் உற்சவங்களும்.<br />
<br />
நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆழ்வார்கள் 4000 பாசுரங்கள்.அத்தனையும் தமிழ்.ஆழ்வார் பாசுரம் கொஞ்சமாவது தெரியாத ஐயங்கார் இருந்தால், வள்ளுவர் சொன்ன மாதிரி, <span style="background-color: lime;">"அவியினும் வாழினும் என் ?</span>". தினப்படி பாசுரம் சொல்லாம ஐயங்கார் இருந்தால் பேசாம அவன் மதம் மாறிடலாம்.அவ்வளவு தமிழ் + பக்தி கலந்த பாட்டுக்கள். <br />
<br />
ஆண்டாள் பாடின திருப்பாவை தெரியாத மனிதர்களை இந்த உலகம் சுமப்பதே தவறு என்று ஒரு தமிழ்ப் பாசுரம் :<br />
<br />
<span style="background-color: lime;">"ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு " </span><br />
<br />
ஒருக்கால் அதுனாலே தான் அடிக்கடி <b><span style="color: red;">EARTHQUAKE</span></b> வந்து பூமி பல பேரை காவு வாங்குதோ ? என்னோட "பகுத்தறிவு"க்குப் புரியலே !<br />
<br />
<br />
<span style="color: red;">பின் குறிப்பு :</span><br />
பகுத்தறிவாளர்கள் "ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்கார்சாமிக்கு மூணு கொம்பு " என்று ஸ்ரீ ரங்கம் ரங்கநாதருடைய தென்கலை திருமண் பற்றி கண்டுபிடித்து நோபெல் பரிசு வாங்கினார்கள்.தென்கலை வடகலை பிரிவினை பற்றி பிறகு பேசுவோம்.<br />
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1774645087529710986.post-27778638995341890342013-01-18T09:25:00.002-08:002013-01-18T09:25:21.202-08:00பிள்ளையார் சுழி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மொத மொதல்லே மூணாவுது ப்ளாக் சைட் (blog site ) பண்ணறோம் ஒரு சுப ஆரம்பமா இருக்கட்டுமேன்னு தான் .. பிள்ளையார் சுழி போட்டு ஆர்ம்பிச்சி ருக்கேன்.</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அது சரி அது என்ன பிள்ளையார்னு கேக்கறீங்களா ? பிள்ளையார் பிடிக்க குரங்கா முடிஞ்ச கதை மாதிரி ஆகாம இருக்கணுமே .. அதான்.</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">என்னதான் குரங்குதனமா எழுதினாலும் தொடங்கும்போதாவது நல்லா இருக்கணும் இல்லையா ? அது தானே பகுத்தறிவு ?</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஆனா ஒரு வடகலை ஐயங்கார் இப்படி பிள்ளையார்லேர்ந்து ஆரம்பிக்கலாமான்னு ஏதாவது கேட்டு வைக்காதீங்க அய்யா ! புண்ணியமா போகும். எதுடா சாக்குன்னு காதுக்கிட்டு இருக்காங்க நம்ம மக்கள்.சும்மா பாஞ்சுடுவாங்க.. இது ஒரு புது சண்டை போட்டுதான் பாக்கலாமேன்னு ..</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இங்கிலீஷ் சைட் தான் யாரும் படிக்க மாட்டேன்கறாங்க தமிழ்லே எழுதினாலாவது படிக்கறாங்களான்னு பாக்கலாமே ! </span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஆனா ஒரு விஷயம் .... இந்த ப்ளாக் ( BLOG ) மூலமா நம்ப தமிழ் சமுதாயத்தை மாத்தப்போறேன், வானத்தை வில்லா வளைக்கப்போறேன், கச்சத்தீவை மீட்கப்போறேன், தனி ஈழம் வாங்கப்போறேன், காவேரி தண்ணி வாங்கப்போறேன் அப்படின்னு உட்டாலக்கடி வேலை எல்லாம் என்னாண்டே இல்லை.அதுக்கெல்லாம் தமிழ் நாட்டுலே நெறைய பேர் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க ..</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வழக்கம் போலே பாப்பான் பாம்பு புண்ணாக்குன்னு E-MAIL எழுதாமே ஏதாவது உருப்படியா எழுதுங்கப்பா தம்பிங்களா .. புண்ணியமா போகும் ..</span></div>
Unknownnoreply@blogger.com2